தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டு உயிர் துறப்பாராம் மகிந்த
அமெரிக்க வங்கிகளில் தனது பெயரில் ஒரு டொலரேனும் வைப்பிலிடப்பட்டுள்ளதை நிரூபித்தால், தனது கழுத்தை அறுத்துக் கொண்டு உயிர்துறப்பேன் என்று சவால் விடுத்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.
பாணந்துறையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்,
“நல்லாட்சியாளர்கள் எமது குடும்பத்தை ஆசியாவிலேயே மிகப்பெரிய செல்வந்த குடும்பமாக வர்ணிக்கின்றனர். அமெரிக்க வங்கிகளில் எனது பெயரில் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக அரசதரப்பினர் குற்றம் சுமத்துகின்றனர்.
அமெரிக்க வங்கியில் எனது பெயரில் ஒரு அமெரிக்க டொலர் வைப்பிலிடப்பட்டுள்ளதாக நிரூபித்தால் கூட எனது கழுத்தை அறுத்துக் கொண்டு உயிர்துறப்பேன். முடிந்தால் அரசு தரப்பினர் இதனை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்றும் சவால் விடுகின்றேன்.
எமது நாட்டுக்கு எதிராக கலப்பு நீதிமன்ற விசாரணை நடைபெறவுள்ளது. பெளத்த குருமார்கள் இதனை எதிர்த்து வீதியில் இறங்குவார்கள். இதனை தடுப்பதற்காகவே பெளத்த குருமாரை கட்டுப்படுத்தும் சட்டத்தை கொண்டு வருவதற்கு அரசு துடிப்பாக முயற்சிக்கிறது.
இவ்வாறான விசாரணை இடம்பெறாது என அதிபர் கூறுகிறார். இது இடம்பெறும் என அரசுக்குள் வேறொரு கூட்டம் தெரிவிக்கிறது.
இந்த விடயத்தில் உண்மையைக் கூறுவது யார் – பொய் கூறுவது யார் என்ற உண்மை தெரியாமல் உள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
He may not have the account in USA bank, but he will have the account somewhere else
அமெரிக்க வங்கிகளில் வைப்புச் செய்ய நீங்கள் அத்தனை முட்டாளா?
நீங்க உலகத்துக்கே கடுக்காய் கொடுத்த வைத்தியராச்சே. உங்களைப் போய் …?