மேலும்

சுயநிர்ணய உரிமை விவகாரம் – விக்கியின் குற்றச்சாட்டை கூட்டமைப்பு நிராகரிப்பு

sumanthiranதமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காற்றில் பறக்கவிட்டு விட்டதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுமத்தியிருந்த குற்றச்சாட்டை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.

வடக்கு மாகாணசபையின் ஆளும்கட்சி உறுப்பினர்களுடன், கடந்த புதன்கிழமை நடத்திய கூட்டத்தில் உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், 2013ஆம் ஆண்டு  வடக்கு மாகாணசபைத் தேர்தலின் போது. கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையைப் பாதுகாப்பது தொடர்பாக இடம்பெற்றிருந்த வாக்குறுதி, 2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் இடம்பெறவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார்.

அதேவேளை, கிளிநொச்சியில் நேற்று நடந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், உரையாற்றிய உறுப்பினர்கள், 2015 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பான தெளிவாக கூறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

2015 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் சுயநிர்ணய உரிமை தொடர்பாக கூடுதலாகப் பேசப்பட்டுள்ளது என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்தியன் எக்ஸ்பிரசிடம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *