பாகிஸ்தான் பிரதமருக்கு கட்டுநாயக்கவில் செங்கம்பள வரவேற்பு
மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று மாலை சிறிலங்கா வந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள் மற்றும் இராஜதந்திரிகள், உயரதிகாரிகள் வரவேற்றனர்.
அதையடுத்து இராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.
அதன் பின்னர், நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மனைவி மற்றும் அதிகாரபூர்வ குழுவினர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து, வாகன பவனியாக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சிறிலங்கா வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர், அரசியல், பொருளாதார, வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக சிறிலங்கா தலைவர்களுடன் பேச்சு நடத்தவுள்ளார்.