ஜெனிவா தீர்மானம் குறித்து சம்பந்தனுடன் ரொனி பிளேயர் ஆலோசனை
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் ரொனி பிளேயர் இன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
கொழும்பில் நடந்த இந்தச் சந்திப்பில், சிறிலங்கா தொடர்பான ஐ.நா தீர்மானம் குறித்து முக்கியமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும்,மீள்குடியமர்வு, பொறுப்புக்கூறல், தமிழர்களின் காணிகளை மீள ஒப்படைத்தல்,காணாமற்போனோர் விவகாரம் என்பன குறித்தும், இந்தச் சந்திப்பின் போது, கலந்துரையாடப்பட்டதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், பொருளாதார மாநாட்டில் பங்கேற்க ரொனி பிளேயர் கொழும்பு வந்துள்ளார்.
சிறிலங்கா விவகாரத்தில் இவர் ஒரு அமைதித் தூதுவராகப் பங்கேற்பதில் ஆர்வம் கொண்டிருப்பதாக, ஊகங்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.