செல்வம் அடைக்கலநாதனுக்கு மாரடைப்பு – சிறி ஜெயவர்த்தனபுர மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், இன்று அதிகாலையில் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, சிறிஜெயவர்த்தனபுர மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செல்வம் அடைக்கலநாதனுக்கு இன்று அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து செல்வம் அடைக்கலநாதனின் உடல் நிலை தேறியிருப்பதாகவும், எனினும், அவர் தொடர்ந்தும், அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் தங்கி சிகிச்சை பெற வேண்டியுள்ளதாகவும், மருத்துவர்களை மேற்கோள்காட்டி அவர் மேலும் தெரிவித்துள்ளனர்.
தொடர் மருத்துவக் கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளின் பின்னரே, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மருத்துவமனையில் இருந்து திரும் முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.