செல்வம் அடைக்கலநாதனுக்கு மாரடைப்பு – சிறி ஜெயவர்த்தனபுர மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், இன்று அதிகாலையில் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, சிறிஜெயவர்த்தனபுர மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.