மேலும்

மாதம்: October 2015

மன்னம்பிட்டி முகாமில் கொல்லப்பட்டு திருமலை கடலில் வீசப்பட்டார் பிரகீத் – விசாரணையில் தகவல்

கடத்தப்பட்டு காணாமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கொலை செய்யப்பட்டு, கடலில் வீசப்பட்டிருக்கலாம் என்று, இதுகுறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

நோர்வேயின் அமைதி முயற்சிகள் குறித்த நூல் லண்டன், ஒஸ்லோவில் வெளியிடப்படுகிறது

சிறிலங்காவில் அமைதியை ஏற்படுத்த நோர்வே மேற்கொண்ட முயற்சிகளை விபரிக்கும், நூல் இம்மாதம் 28ஆம் நாள் லண்டலிலும், அடுத்தமாதம் 2ஆம் நாள் ஒஸ்லோவிலும் வெளியிடப்படவுள்ளன.

கனடா நாடாளுமன்றத் தேர்தல் – ஹரி ஆனந்தசங்கரி வெற்றி, ராதிகா தோல்வி

கனேடிய நாடாளுமன்றத்துக்கு நேற்று நடந்த தேர்தலில் லிபரல் கட்சி முன்னணியில் இருக்கும் நிலையில் அந்தக் கட்சியின் சார்பில் ஸ்காபரோ ரூஜ் பார்க்  தொகுதியில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி 4294 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

விசாரணையில் வெளிநாட்டவர்களுக்கு இடமில்லை என்கிறார் சம்பிக்க ரணவக்க

கலப்பு நீதிமன்ற முறைமையில் எவ்வாறான அனைத்துலக உதவிகளை பெறுவது என்பதை சிறிலங்கா அரசாங்கமே தீர்மானிக்கும் என்றும், இதில் வெளிநாட்டவர்களுக்கு இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் அமைச்சர் சம்பிக்க ரணவக்க.

ரவிராஜ் படுகொலை சூத்திரதாரியை கைது செய்ய சுவிசின் உதவியை நாடுகிறது சிறிலங்கா

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை குறித்து விசாரித்து வரும் சிறிலங்கா காவல்துறை, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரைக் கைது செய்வதற்கு சுவிற்சர்லாந்து அரசாங்கத்தின் உதவியை நாடியுள்ளது.

சிங்கக்கொடி ஏந்தி சிங்கள நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் – மகிந்த அணி சூளுரை

மீண்டும் சிங்கக்கொடிகளை ஏந்தி சிங்கள பெளத்த நாட்டைக் காப்பாற்ற அனைத்து சிங்களவர்களும் முன்வரவேண்டும், இந்த நாட்டை சிங்கள நாடாகவே கட்டியெழுப்ப வேண்டும் என்று, கொழும்பில் நேற்று நடத்திய கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச ஆதரவு அணியினர் சூளுரைத்துள்ளனர்.

பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையால் சிறிலங்கா அரசாங்கத்துக்குள் பிளவு?

காணாமற்போனோர் தொடர்பாக விசாரிக்கும், மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான அதிபர் ஆணைக்குழுவின் அறிக்கையால் சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கத்துக்குள் பிளவுகள் ஏற்படலாம் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் படைத்தளபதிகளிடம் விசாரணை – சிறிலங்கா அதிபர் அதிருப்தி

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் வெளிநாடுகளில் தூதுவர்களாகப் பணியாற்றிய சிறிலங்காவின் படைத் தளபதிகள் அண்மையில் பாரிய, மோசடிகள் குறித்த அதிபர் ஆணைக்குழுவினால் விசாரிக்கப்பட்டது குறித்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதிருப்தி தெரிவித்துள்ளார்.

பிரகீத் கடத்தல் வழக்கில் சிறிலங்கா இராணுவத் தளபதியும் விசாரணைக்கு அழைப்பு

காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தக் கோரி, அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட தாக்கல் செய்திருந்த வழக்கில், பிரதிவாதிகளாக சிறிலங்கா இராணுவத் தளபதியையும் இராணுவ புலனாய்வுப் பிரிவுத் தளபதியை சேர்ப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ராஜீவ்காந்தி எடுத்த முடிவே அவரைப் பலியெடுத்தது – உத்தரப் பிரதேச மாநில ஆளுனர் ராம் நாயக்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, சிறிலங்காவுக்கு இந்திய அமைதிப்படையை அனுப்புவதற்கு அவர் எடுத்த முடிவினால் தான், உயிரை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில ஆளுனர் ராம் நாயக் தெரிவித்துள்ளார்.