மேலும்

மூன்று அமைச்சர்கள் மட்டும் அவசரமாக பதவியேற்றனர்

wejedasa-msசிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் மூன்று அமைச்சர்கள் மட்டும் இன்று அதிபர் செயலகத்தில் நடந்த நிகழ்வில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்பாக அவசரமாகப் பதவியேற்றுள்ளனர்.

வெளிவிவகார அமைச்சராக மங்கள சமரவீரவும், நீதி அமைச்சராக விஜேதாச ராஜபக்சவும், புனர்வாழ்வு அமைச்சராக டி.எம்.சுவாமிநாதனும் இன்று காலை பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இவர்கள், ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் முதல் இதே அமைச்சுப் பதவிகளை வகித்து வந்தவர்களாவர்.

ms-mangala-wejedasa-swamiஅமெரிக்க இராஜாங்கத் திணைகளத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் நிஷா பிஸ்வால் நாளை சிறிலங்கா வரவுள்ளதாகவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவை அதிகாரிகளுடனான சந்திப்புக்காகவும், இந்த அமைச்சர்கள் அவசரமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய அமைச்சர்கள் நாளை பதவியேற்பர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *