மேலும்

கொல்கத்தாவில் ஆறு விடுதலைப் புலிகள் கைது – ரைம்ஸ் ஒவ் இந்தியா தகவல்

Arrestஇந்தியாவின் கொல்கத்தா நகரின் மத்திய பகுதியில் உள்ள சாந்னிசௌக் பகுதியில், விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஆறு பேர், சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட ஆறு பேரும் இலங்கைத் தமிழர்கள் என்றும், இவர்கள் சென்னையில் இருந்து நான்கு நாட்களுக்கு முன்னர் கொல்கத்தா வந்ததாகவும், அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இன்று இந்தியாவின் சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்ற நிலையில் இவர்கள் ஏன் கொல்கத்தா வந்தனர் என்பது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கைது செய்யப்பட்டவர்களில், குணசேகரன் மற்றும் பாலசிங்கம் ஆகியோர் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தலைவர்கள் என்றும் இவர்கள் ஏதாவது நடவடிக்கைக்காக அல்லது வேவு பார்ப்பதற்காக வந்துள்ளனரா என்பது குறித்து விசாரிக்கப்படுவதாகவும், கொல்கத்தா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், இவர்கள் இந்தியாவில் செயற்படும் இடதுசாரி மாவோ இயக்கத்தினருடன் தொடர்புடையவர்களா என்று விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *