மேலும்

கிளிநொச்சியில் திறன் விருத்தி நிலையத்தை அமைக்கிறது இந்தியா

India-srilanka-Flagயாழ்.பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தில் திறன் விருத்தி நிலையம் ஒன்றை அமைக்கும் 300 மில்லியன் ரூபா திட்டம் ஒன்றை இந்தியா ஆரம்பித்துள்ளது.

கிளிநொச்சியில் இயங்கும் யாழ். பல்கலைக்கழக விவசாய பீடத்தில், இந்த திறன்விருத்தி நிலையத்தை இந்தியா அமைத்துக் கொடுக்கவுள்ளது.

இதற்காக கட்டடங்களை அமைத்து, அதற்குத் தேவையான தளபாடங்கள் மற்றும் கருவிகளைப் பெற்றுக் கொடுப்பதும், பயிற்சிகள், திறன் விருத்திக்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதும், இந்தியாவின் இந்த திட்டத்தில் உள்ளடங்கியுள்ளது.

உயர்கல்வித் துறையில் சிறிலங்காவுடன் அபிவிருத்திப் பங்காளராக இந்தியா இணைந்து மேற்கொள்ளும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த திறன் விருத்தி நிலையம் அமைக்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *