மேலும்

Tag Archives: மில்லியன்

இரத்த வெள்ளத்தில் கிடந்த திறைசேரி அதிகாரி ராஜபக்ச – மரணத்தில் சந்தேகம்.

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் திறைசேரி நிதி திருட்டு தொடர்பாக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட வெளி வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்கா நிஷாந்த ராஜபக்ச மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் 7,672 மில்லியன் ரூபா நட்டம்

அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த எட்டு நிலக்கரி கப்பல்களினால்  7,672 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா மின்சார சபை அறிவித்துள்ளது.

அமெரிக்க தடைக்கு மத்தியில் ஈரான் – சிறிலங்கா வெளியுறவு அமைச்சர்கள் பேச்சு

மேற்காசியாவில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானிய வெளியுறவு அமைச்சருடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்காவுக்கான பாதீட்டு உதவியை அதிகரித்தது இந்தியா

2026-27 பாதீட்டில், சிறிலங்காவுக்கான பாதீட்டு  உதவியைஇந்தியா 4 பில்லியன் இந்திய ரூபாவாக ( 43.6 மில்லியன் டொலர்)  அதிகரித்துள்ளது.

100 மில்லியன் ரூபா செலவில் சிறிலங்காவின் சுதந்திர நாள் கொண்டாட்டங்கள்

சிறிலங்காவின் 78வது சுதந்திர நாள் கொண்டாட்டங்களுக்காக 2026 ஆம் ஆண்டு பாதீட்டில்  100 மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக மாகாண சபைகள் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அலோக பண்டார தெரிவித்துள்ளார்.

மீண்டும் குதிரை பேரம் – 3 மில்லியன் டொலருக்கு விலை பேசப்படும் எம்.பிக்கள்

நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும்  குதிரை பேரத்தில் மகிந்த ராஜபக்ச தரப்பினர் மீண்டும் இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது

வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, முதற்கட்டமாக 28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணி இந்தியாவிடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்று முன்தினம் அங்கீகாரம் அளித்துள்ளது.

உதயங்க வீரதுங்கவின் 94 மில்லியன் ரூபா சொத்துக்கள் கண்டுபிடிப்பு

ரஷ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவின் 94 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

சீனா வழங்கிய 292.1 மில்லியன் டொலர் மத்திய வங்கியில் வைப்பு

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கியதன் மூலம் பெறப்பட்ட முதற்கட்ட கொடுப்பனவான, 292.1 மில்லியன் டொலர் சிறிலங்கா மத்திய வங்கியின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு நேரடி முதலீடுகளில் புதிய சாதனை

அடுத்த ஆண்டில் 2.5 பில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகளைக் கவருவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.