மேலும்

Tag Archives: கிளிநொச்சி

கிளிநொச்சியில் வலுவான இராணுவ இருப்பு அவசியம்- மேஜர் ஜெனரல் கே.டி.பி. டி சில்வா

நீண்டகால அமைதியையும் உறுதித்தன்மையையும் உறுதி செய்வதற்காக,  கிளிநொச்சியில் வலுவான இராணுவ இருப்பைப் பேணுவதன் மூலோபாய முக்கியத்துவத்தை, சிறிலங்காவின் இராணுவத்தின் யாழ். படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் கே.டி.பி. டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.

கிளிநொச்சியில் கரிநாள் பேரணி- பெரும் திரளானோர் பங்கேற்பு

சிறிலங்காவின் 78 வது சுதந்திர நாளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து  தமிழர் தாயகத்தின் முன்னெடுக்கப்பட்ட கரிநாள் போராட்டத்தின் ஒரு கட்டமாக  கிளிநொச்சியில் இன்று  யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில்   எதிர்ப்புப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

கிளிநொச்சியில் பாலத்தை புனரமைக்கும் இந்திய இராணுவ அதிகாரிகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் டிட்வா புயலினால் சேதம் அடைந்துள்ள பாலத்தைப் புனரமைக்கும் பணியில் இந்திய இராணுவ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்தடுத்து நிகழும் விபத்துகள் – விசாரிக்க இராணுவ நீதிமன்றம்

கடந்த சில வாரங்களில் இடம்பெற்ற விபத்துகளில் அதிகளவு சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டமை மற்றும், காயமடைந்தமை தொடர்பாக இராணுவ நீதிமன்ற விசாரணை நடத்தப்படவுள்ளது.

வடக்கில் முன்னொருபோதும் இல்லாத வரட்சி – 3 இலட்சம் பேர் பாதிப்பு

தற்போது நிலவும் கடுமையான வரட்சியினால், வடக்கு மாகாணத்தில் 3 இலட்சம் மக்கள் கடும் பாதிப்புக்கு  உள்ளாகியிருப்பதாக, இடர் முகாமைத்துவ மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்

தமிழ்நாட்டில் அகதிகளாகத் தங்கியிருந்த 25 குடும்பங்களைச் சேர்ந்த 48 ஈழத்தமிழர்கள் எதிர்வரும் 23ஆம் நாள் தாயகம் திரும்பவுள்ளனர்.

வடக்கு, கிழக்கில் சரிந்துபோன கபொத சாதாரண தர தேர்வுப் பெறுபேறு

கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் நடந்த கபொத சாதாரணதரத் தேர்வு பெறுபேறு நேற்று சிறிலங்கா தேர்வுத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் மோசமான பெறுபேறுகளைப் பெற்றுள்ளன.

கிழக்கில் முழு அடைப்பு  – நீதி கோரித் திரண்ட மக்கள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும், ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு மேலும் கால அவகாசம் வழங்கக் கூடாது என்பதையும் வலியுறுத்தியும், கிழக்கில் நேற்று முழு அடைப்புப் போராட்டமும், பாரிய பேரணியும் நடத்தப்பட்டன.

சிறுபான்மையினரின் ஆதரவு இன்றியே வெற்றி பெறுவேன் – கோத்தா

சிறுபான்மையினரின்- குறிப்பாக தமிழர்களின் ஆதரவு இன்றி, சிங்களப் பெரும்பான்மையினரின் ஆதரவுடன் தம்மால் அதிபர் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்று, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் கதறலால் கலங்கியது கிளிநொச்சி

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின்  கவனத்தை ஈர்க்கும் நோக்குடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் இன்று காலை, பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தினர்.