சிறிலங்கா- சீன கொமாண்டோக்களின் கூட்டுப் பயிற்சி நேற்றுடன் நிறைவு
சிறிலங்கா- சீன கொமாண்டோக்கள் இணைந்து நடத்தி வந்த பட்டுப்பாதை-2015 கூட்டுப் பயிற்சியின் இரண்டாவது கட்டம் நேற்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
சிறிலங்கா- சீன கொமாண்டோக்கள் இணைந்து நடத்தி வந்த பட்டுப்பாதை-2015 கூட்டுப் பயிற்சியின் இரண்டாவது கட்டம் நேற்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் நேற்றுமுன்தினம் இரவு திடீர் சுகவீனமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைக் கேள்வியுற்று அதிர்ச்சியடைந்த சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, வேட்புமனுக்களைப் பாதுகாப்பதற்காக கூட்டம் ஒன்றில் இருந்து ஓடிச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடக்கவுள்ள தேர்தலில் 6,151 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக, சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக, யாழ்ப்பாண மாவட்டத்தில் சுயேச்சையாக போட்டியிடவுள்ளதாக அறிவித்த வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் பிரதி அமைச்சரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேசியப்பட்டியலில் இடமளிக்க மறுத்துள்ளது.
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 7 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், 15 அரசியல் கட்சிகளும், 6 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுவதாக, யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி நா.வேதநாயகன் தெரிவித்தார்.
வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் நாள் சிறிலங்கா நாடாளுமன்றதுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தில், மொத்தம் 28 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தம் 46 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் போட்டியில் குதித்துள்ளன. இன்று நண்பகலுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்ததையடுத்து, மட்டக்களப்பு மாவட்டத் தெரிவத்தாட்சி அதிகாரி பி.எஸ்.எம். சாள்ஸ் இதனைத் தெரிவித்தார்.
சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் சார்பில் போட்டியிட சுயேச்சைக் குழுவொன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி வரும் நாடாளுமன்றத் தேர்தலில், கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக இன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.