மேலும்

நாள்: 3rd July 2015

மகிந்தவிடம் மண்டியிட்டார் மைத்திரி – வேட்பாளராக நிறுத்த இணக்கம்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுவதற்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேம் ஜெயந்த தெரிவித்துள்ளார்.

மைத்திரியைக் கொல்ல முயன்ற வழக்கில் முன்னாள் போராளிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன 2006ஆம் ஆண்டு மகாவலி அபிவிருத்தி அமைச்சராக இருந்த போது, குண்டுவைத்துக் கொல்ல முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மகிந்தவின் அடுத்த நகர்வு – ஓரிரு மணிநேரத்தில் அறிவிப்பு வெளியாகிறது

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான தமது நிலைப்பாட்டை, மகிந்த ராஜபக்ச தரப்பு இன்று பிற்பகல் 4 மணியளவில் கொழும்பில் நடைபெறவுள்ள செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்படும் என்று, மகிந்த ராஜபக்சவின் பேச்சாளர் ரொகான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த – கருத்து வெளியிட மறுக்கிறது ஐ.நா

சிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச போட்டியிடுவது குறித்து கருத்து வெளியிட ஐ.நா மறுத்துள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தல் – தடுமாறும் மைத்திரி

1994ல் பொதுத் தேர்தல் பெறுபேறு அறிவிக்கப்பட்ட போது, சந்திரிகா குமாரதுங்க இரகசிய இடத்தில் மறைந்திருந்தார். இத்தேர்தல் பெறுபேறால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அவர் கருதினார். இவரது விசுவாசிகள் மாத்திரமே இவர் தங்கியிருந்த இரகசிய இடத்திற்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

மாற்று அணியை அமைக்கும் முயற்சியில் மகிந்த அணி தீவிரம்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட மகிந்த ராஜபக்சவுக்கு இடமளிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மறுத்து விட்ட நிலையில், மாற்று அணியொன்றை அமைத்துப் போட்டியிடும் தீவிர முயற்சியில் மகிந்த ராஜபக்ச தரப்பு இறங்கியுள்ளது.

கூட்டமைப்பின் ஆசனப் பங்கீடு குறித்து நாளை இறுதி முடிவு

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு இடையிலான ஆசனப் பங்கீடு குறித்து, நாளை வவுனியாவில் நடைபெறவுள்ள உயர்மட்டக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

மகிந்தவுக்கு ஆதரவளிக்கமாட்டோம் – கைவிரித்தது பொது பல சேனா

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கமாட்டோம் என்று, சிங்கள கடும்போக்குவாத அமைப்பான பொது பல சேனா அறிவித்துள்ளது.

மகிந்தவுக்கு இடம் கிடைக்குமா? – இன்று காலை அதிகாரபூர்வமாக அறிவிக்கிறார் மைத்திரி

மகிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் இடமளிப்பது தொடர்பாக இன்று காலை 10 மணியளவில் அதிகாரபூர்வமாக அறிவிப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் குதிக்கும் 13 கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள்

வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், சுமார் 13 வரையான கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.