மேலும்

நாள்: 29th July 2015

சிறிலங்காவில் இராணுவத் தளம் அமைக்கப் போகிறதாம் அமெரிக்கா – திஸ்ஸ விதாரண கூறுகிறார்

சிறிலங்காவில்  இராணுவத் தளங்களை அமைக்க அமெரிக்க எண்ணம் கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் சமஸ்டி யோசனையை ஐதேக நிராகரிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள, சமஸ்டி முறையில் அதிகாரங்களைப் பகிரும் அரசியல் தீர்வை ஐக்கிய தேசியக் கட்சி நிராகரித்துள்ளது.

மகிந்தவின் களுத்துறைக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக மகிந்த சமரசிங்க அறிவிப்பு

களுத்துறையில் எதிர்வரும் ஓகஸ்ட் 3ஆம் நாள் நடக்கவுள்ள, மகிந்த ராஜபக்ச பங்கேற்கும் பரப்புரைக் கூட்டத்தில் தாம் பங்கேற்கப் போவதில்லை என்று நிதி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளருமான மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

எதிரி பலவீனமடைந்துள்ள போது தான் குரல்வளையைப் பிடிக்க வேண்டும் – சேருவிலவில் யதீந்திரா

ஆட்சி மாற்றத்தால் தெற்கு பலவீனமடைந்திருக்கிறது. எங்களுடைய எதிரி பலவீனமடைந்திருக்கின்ற சந்தர்ப்பம் தான் அவன் குரல்வளையை நாங்கள் பிடிப்பதற்கான தருணம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட இளம் வேட்பாளரும் அரசியல் ஆய்வாளருமான யதீந்திரா தெரிவித்துள்ளார்.

முருகன், சாந்தன், பேரறிவாளன் மரணதண்டனை ரத்துச் செய்யப்பட்டது சரியே – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரணதண்டனை ரத்துச் செய்யப்பட்டதற்கு எதிராக இந்திய மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை இந்திய உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு சற்று முன்னர்  தள்ளுபடி செய்துள்ளது.

மகிந்தவின் மற்றொரு சதித்திட்டத்தை தோற்கடித்தார் மைத்திரி

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து, நீக்குவதற்கு மகிந்த ராஜபக்ச ஆதரவுத் தரப்பினர் மேற்கொண்ட முயற்சிகளை முறியடிக்கவே, ராஜித சேனாரத்ன உள்ளிட்ட ஐந்து பேரை கட்சியில் இருந்து இடைநிறுத்தும் முடிவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகின.

சிறிலங்காவுடன் நெருக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்பு – கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் தகவல்

சயனைட் குப்பிகள், புவிநிலைகாட்டிகளுடன் இராமேஸ்வரத்தில் வைத்த தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட, விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் குறித்து தகவல்களை வெளியிட, கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் மறுத்துள்ளது.

நாளை இராமேஸ்வரத்தில் அப்துல் கலாமின் இறுதி நிகழ்வு

மேகாலயா மாநிலத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்த போது, திடீர் மாரடைப்பு ஏற்பட்டு நேற்றுமுன்தினம் இரவு காலமான இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் இறுதிநிகழ்வு, நாளை அவரது சொந்த இடமான இராமேஸ்வரத்தில் நடைபெறவுள்ளது.

13க்குள் தான் அரசியல் தீர்வாம் – இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறுகிறார் மகிந்த

சிறிலங்காவின் தேசியப் பிரச்சினைக்கு 13ஆவது திருத்தத்துக்குள்- மாகாணசபைகள், உள்ளூராட்சி சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கும், அரசியல் தீர்வு ஒன்று, ஆட்சியமைத்து ஆறுமாதங்களுக்குள் முன்வைக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

கசிந்துள்ள ஐ.நா ஆவணம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா என கேள்வி எழுப்புகிறது சனல்4

ஐ.நாவில் இருந்து கசிந்து தமக்கு கிடைத்துள்ள ஆவணம் ஒன்று, சிறிலங்காவில் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதி கிடைக்குமா என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளதாக, பிரித்தானியாவின் சனல் 4 ஊடகம் தெரிவித்துள்ளது.