மேலும்

நாள்: 25th July 2015

கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் சம்பந்தன் – முழுமையான தேர்தல் அறிக்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை, மருதனார் மடத்தில் இன்று மாலை நடந்த பரப்புரைக் கூட்டத்தில், வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையை இன்று மாலை 5 மணியளவில் வெளியிட்டார்.

திருமலை ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார் வண. அன்ரனி நோயல் இம்மானுவெல் ஆண்டகை

திருகோணமலை மறைமாவட்ட ஆயர் வண. அன்ரனி நோயல் இம்மானுவெல் ஆண்டகையின் திருநிலைப்படுத்தல் நிகழ்வு இன்றுகாலை திருகோணமலையில் இடம்பெற்றது.

வடக்கில் படைகளைக் குறைக்கவில்லை – ஒப்புக்கொள்கிறார் சிறிலங்கா இராணுவத் தளபதி

வடக்கில் இருந்து  இராணுவமுகாம்கள் எதுவும் அகற்றப்படவில்லை என்றும்,  நாட்டில் மீண்டும் தீவிரவாதம் தலையெடுப்பதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்றும் உறுதி அளித்துள்ளார் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா.

நாளை மாலைதீவு செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை மாலைதீவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். மாலைதீவின் தேசிய சுதந்திர நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவே சிறிலங்கா அதிபர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

வடக்கில் இராணுவம் சாரா செயற்பாடுகளை மட்டுப்படுத்தி விட்டதாம் சிறிலங்கா இராணுவம்

வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றல், மீள்குடியமர்வு தொடர்பான கட்டுமானம், மற்றும் உட்கட்டுமான அபிவிருத்தி போன்றவற்றுக்கு மட்டும், தமது பணிகளை மட்டுப்படுத்தியுள்ளதாக சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.

வட, கிழக்குத் தமிழர்கள் வாக்குகளை ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும் – சம்பந்தன் அழைப்பு

தமிழரின் இலட்சியத்தை விரைவில் அடைவதற்கு, அடுத்தமாதம் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தமிழர் தாயகத்தில் உள்ள  அனைத்துத் தமிழ்மக்களும் தமது வாக்குகளை ஆயுதமாக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

சீன – அமெரிக்க – இந்திய உறவுகளின் பண்புகள் – ‘தாராள சனநாயக அரசியல் சமுத்திரத்தில் நீந்தக் கற்றல்’

எந்த உலக தலைவர்கள் இலங்கைத்தீவிற்கு சென்றாலும் இரு நிர்வாக அலகுகளாக கொழும்பையும் யாழ்ப்பாணத்தையும் கையாளுவது கவனிக்கத்தது. சர்வதேச இராசதந்திர விதிமுறைகளின் கீழ் யாழ்ப்பாணத்துக்கு சமகௌரவம் தரப்படுவது, சர்வதேச செல்வாக்கை பெறுவதற்கு உரிய திறவுகோலாக தமிழ் தலைமைத்துவம் எடுத்து கொள்வதில் தவறேதுமில்லை – புதினப்பலகைக்காக லோகன் பரமசாமி.

மைத்திரியின் அணிவகுப்புக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியில் ரவை – பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற நிகழ்வு ஒன்றில் அணிவகுப்பில் ஈடுபட்டிருந்த கடெற் மாணவரின் துப்பாக்கியில், ரவை ஒன்று சிக்கியிருந்ததை, சிறிலங்கா அதிபரின் பாதுகாப்புப் பிரிவினர் கண்டறிந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகிந்தவின் விரல்களை நசித்தவர் மன்னிப்புக் கோரினார்

அக்குரஸ்ஸவில் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச ஆவேசமடையக் காரணமாக இருந்தவர், தனது செயலுக்காக நேற்று மன்னிப்புக் கோரியுள்ளார்.

ஐந்து மத்திய குழு உறுப்பினர்களை நீக்குவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி தீவிர முயற்சி

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் ஐந்து பேரை, மத்திய குழுவில் இருந்து விரைவில் நீக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.