மேலும்

நாள்: 15th July 2015

இலங்கையர்களின் நீண்டகாலக் காத்திருப்பு வீணாகக் கூடாது – அமெரிக்க ஊடகம்

சிறிலங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசு என அறியப்படும் சிறிலங்காவில் கடந்த பத்தாண்டாக குடும்ப ஆட்சி நிலவியது. உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடான சீனாவின் ஆதிக்கம் சிறிலங்காத் தீவில் நிலைநாட்டப்படுவதற்கு இக்குடும்ப ஆட்சி வழிகோலியது.

சுதந்திரக் கட்சியின் செயற்குழுவைக் கூட்ட நீதிமன்றம் தடை – மகிந்தவின் திட்டத்துக்கு ஆப்பு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தை, கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின்றி கூட்டுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று மாலை தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் குழுத் தலைவராக மகிந்த நியமனம்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் குழுத் தலைவராக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளதாக, கூட்டணியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தினேஸ் குணவர்த்தன அறிவித்துள்ளார். 

ஜூலை 17 இல் அனுராதபுரத்தில் மைத்திரிக்கு பதில் – என்கிறார் மகிந்த

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பாக, வரும் ஜூலை 17ஆம் நாள் அனுராதபுரவில்  பதிலளிக்கப்படும் என்று கூறியிருக்கிறார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

சுதந்திரக் கட்சி மத்தியகுழுக் கூட்டத்தை ரத்துச்செய்ய மைத்திரி உத்தரவு – தொடங்கியது பனிப்போர்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவின் அவசரக் கூட்டத்தை, சிறிலங்கா அதிபரும், சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன ரத்துச் செய்து உத்தரவிட்டுள்ளார்.

சுதந்திரக் கட்சி தலைமையைக் கைப்பற்றும் முயற்சியில் மகிந்த – உயர்மட்டத்துடன் அவசர கூட்டம்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து மைத்திரிபால சிறிசேனவை நீக்கி விட்டு, அதன் தலைமைப் பதவியைக் கைப்பற்றும் முயற்சியில் மகிந்த ராஜபக்ச இறங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்த அணியை கிலிகொள்ள வைத்துள்ள மைத்திரியின் தாக்குதல் – அடுத்த கட்டம் குறித்து குழப்பம்

மகிந்த ராஜபக்சவை தாம் அங்கீகரிக்கவில்லை என்றும், அவருக்கு பிரதமர் பதவி வழங்கப்படாது என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றுமாலை வெளியிட்ட கருத்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் பெரும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பதவி விலகாமலேயே அதிகளவு மாகாணசபை உறுப்பினர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி

மாகாணசபை உறுப்பினர்களாகவும், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களாகவும் இருந்து கொண்டே, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியும் என்பதால், இம்முறை அதிகளவான மாகாணசபை உறுப்பினர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மகிந்தவுக்கு பிரதமர் பதவியை மறுப்பது ஏன்? – மைத்திரி அளித்த விளக்கம்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றாலும், மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்படமாட்டார் என்று தெளிவாகத் தெரிவித்துள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதற்கான காரணத்தையும் விபரித்துள்ளார்.

அதிர்ச்சியில் கருணா – உறுதிமொழி கொடுத்து ஏமாற்றிவிட்டதாக விசனம்

தனக்குத் தேசியப்பட்டியலில் இடமளிப்பதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றிவிட்டதாக விசனமும், அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளார், முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்.