மேலும்

மாதம்: June 2015

வித்தியா படுகொலையை அடுத்து புங்குடுதீவை விட்டு வெளியேறும் குடும்பங்கள்

மாணவி வித்தியா படுகொலையைத் தொடர்ந்து புங்குடுதீவை விட்டு பல குடும்பங்கள் வெளியேறி வருவதாக, பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் தகவல் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரிக்கு ஆதரவு தெரிவிக்கிறது ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு

அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடத் திட்டமிட்டுள்ள அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டனுக்கு ஆதரவு தெரிவித்து, ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

ஓமந்தையில் 14வயதுச் சிறுமி மர்ம மரணம் – வடக்கில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள்

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் 14 வயதுச் சிறுமி ஒருவர் நேற்று மர்மமான நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓமந்தை அருகே உள்ள வேலர் சின்னக்குளத்தில், வீட்டில் தனித்திருந்த இந்தச் சிறுமி, நேற்றுமாலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நடுக்கடலில் 54 இலங்கையர்களை திருப்பி அனுப்பியது அவுஸ்ரேலியா

இந்தோனேசியாவில் இருந்து 54 இலங்கையர்கள் உள்ளிட்ட 65 பேருடன் சென்ற அகதிகள் படகு ஒன்றை அவுஸ்ரேலிய சுங்கத் துறையினர் நடுக்கடலில் வழி மறித்து, திருப்பி அனுப்பியுள்ளனர். இந்தோனேசிய காவல்துறை அதிகாரியை மேற்கோள்காட்டி சிட்னி மோர்னிங் ஹெரோல்ட் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவார் மகிந்த – அவரது பேச்சாளர் உறுதிப்படுத்தினார்

சிறிலங்காவில் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, பிரதமர் வேட்பாளராக  நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக,அவரது பேச்சாளர் ரொஹான் வெலிவிட்ட பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

பாகிஸ்தான் இராணுவத் தளபதி வரும் 5ஆம் நாள் சிறிலங்காவுக்குப் பயணம்

பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப், வரும் 5ம் நாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

வித்தியா படுகொலை சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

புங்குடுதீவில் கூட்டுவன்புணர்வுக்குப் பின்னர்  மாணவி வித்தியா சிவலோகநாதன் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு, இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நீதிவான் லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஒபாமாவின் சிறிலங்கா பயணம் – ஏற்பாடுகள் நடப்பதை உறுதிப்படுத்தியது சிறிலங்கா

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் சிறிலங்கா பயணம் தொடர்பாக கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக. சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

தமிழ்மக்களின் இனப்படுகொலைக்கு தாமதமற்ற நீதி வேண்டும் – கலாநிதி அப்துல் ருப்

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் ‘தமிழ் இனத்தை நிர்மூலமாக்குவதற்கான’ திட்டமிட்ட மூலோபாயம் அரங்கேற்றப்பட்டது. தமிழ் மக்கள் சிறிலங்காவில் எஞ்சியிருக்கக் கூடாது என்பதற்காக இவ்வாறானதொரு இனப்படுகொலை முயற்சி மிக இரகசியமாக மேற்கொள்ளப்பட்டது.

சிராந்தியிடம் இரகசிய இடத்தில் விசாரணை – மகிந்த போட்ட திட்டம் பிசுபிசுப்பு

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்சவிடம், நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினர் இன்று இரகசிய இடமொன்றில் வைத்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.