மேலும்

பாகிஸ்தான் இராணுவத் தளபதி வரும் 5ஆம் நாள் சிறிலங்காவுக்குப் பயணம்

General Raheel Sharifபாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப், வரும் 5ம் நாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ஐந்து நாள் பயணமாக கொழும்பு வரும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, பாதுகாப்பு செயலர் மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கடற்படை, விமானப்படைத் தளபதிகளையும் சந்திக்கவுள்ளார்.

மேலும் சில இராணுவத் தளங்களுக்கும் அவர் பயணம் மேறகொள்வார்.

பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப் கடந்த மாதம் 13ம் நாள் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார்.

ஆனால், கராச்சி நகரில் பேருந்து ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 47 பேர் பலியான சம்பவத்தை அடுத்து, அவரது பயணம் கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *