சிறிலங்காவில் சீனாவின் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் குழு
சிறிலங்கா இராணுவத்தின் தியத்தலாவ இராணுவப் பயிற்சி முகாமில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சீனாவின் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
தியத்தலாவ பயிற்சி முகாமில், சீனாவினால் அமைக்கப்படும் மண்டபத் தொகுதி கட்டுமானத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து மீளாய்வு செய்யவே சீன இராணுவ அதிகாரிகள் குழு சிறிலங்காவுக்கு வந்திருக்கிறது.
சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் அதிகாரிகள் தலைமையகத்தின் இராணுவப் பயிற்சி திணைக்கள அரசியல் ஆணையாளர் மேஜர் ஜெனரல் செங் ஜியாங் தலைமையிலான ஆறு பேர் கொண்ட நிபுணர் குழுவே இந்த ஆய்வை மேற்கொள்கிறது.
இன்று தியத்தலாவ பயிற்சி முகாமுக்கு வந்த இந்தக் குழுவினர், சிறிலங்காவின் இராணுவப் பயிற்சிப் பிரிவு பணிப்பாளர் மேஜர் ஜெனரல் மனோ பெரேரா, தியத்தலாவ இராணுவப் பயிற்சி முகாம் பொறுப்பதிகாரி பிரிகேடியர் ராஜகுரு ஆகியோருடன் நீண்ட பேச்சுக்களை நடத்தினர்.