விசாரணைப் பொறிமுறை குறித்து உயர்மட்டத்தில் உள்ளக கலந்துரையாடல்
பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்கான நம்பகமான பொறிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக, சிறிலங்காவின் உயர்மட்ட அதிகாரிகள் உள்ளக கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலன்னே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே இவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 29வது கூட்டத் தொடரில் ஆரம்ப உரையாற்றிய ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், சிறிலங்கா குறித்து வெளியிட்ட கருத்து தொடர்பாக அவர் கருத்து வெளியிடுகையில்,
“ ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் கருத்து கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து உள்ளக கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர்.
இதற்குத் தீர்வு காண்பதற்கு, எல்லாப் பங்குதாரர்களுடனும் கலந்தாலோசிக்க வேண்டியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.