மேலும்

நாள்: 2nd February 2015

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுனர், தலைமைச் செயலர் பதவியேற்பு

வடக்கு மாகாண சபையின் புதிய தலைமைச் செயலராக சிறிலங்கா நிர்வாக சேவையின் முதற்தர அதிகாரியான ஏ.பத்திநாதன் இன்று காலை  பதவியேற்றுக் கொண்டார்.

அமெரிக்க – சிறிலங்கா இராஜதந்திர உறவு புதிய மட்டத்தை எட்டும் – மங்கள சமரவீர

அமெரிக்கா இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியை சந்தித்துப் பேச்சு நடத்துவதற்காக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அடுத்தவாரம் வொசிங்டனுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

மனித உரிமைகள் பிரச்சினையை தீர்க்க சிறிலங்காவுக்கு உதவ அமெரிக்கா தயார் – நிஷா பிஸ்வால்

மனித உரிமை விவகாரங்கள் மற்றும் நல்லாட்சி போன்ற விடயங்களில் சிறிலங்காவுக்கு உதவ அமெரிக்கா தயாராக இருப்பதாக தெற்கு மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க கைது

ஐதேகவின் முன்னாள் பொதுச்செயலரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்க கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இன்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடக்கில் கோத்தா அபகரித்த தமிழ்மக்களின் காணிகள் மீள ஒப்படைக்கப்படும் – சம்பிக்க ரணவக்க

வடக்கில் உயர்பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வையில், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தமிழ் மக்களிடம் இருந்து அபகரித்த காணிகள் மீண்டும் அவர்களிடமே வழங்கப்படும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு வந்தார் நிஷா பிஸ்வால் – இன்றும் நாளையும் முக்கிய பேச்சு

தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக  இன்று அதிகாலை கொழும்பு வந்து சேர்ந்துள்ளார்.

புலிகளின் நிதிக்கு நடந்தது என்ன? – விசாரணை நடத்தப் போவதாக ரணில் அறிவிப்பு

போர் முடிவுக்கு வந்த பின்னர், விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது என்பது குறித்து புதிய அரசாங்கம் விசாரணைகளை நடத்தும் என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றவாளிகளை தண்டித்து விட்டு பொதுமன்னிப்பு அளிக்க திட்டம்?

போரின்போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து உள்நாட்டு விசாரணைகளை நடத்தி, குற்றம் இழைத்தவர்களுக்குத் தண்டனை பெற்றுக் கொடுத்து விட்டு பின்னர் அவர்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்கலாம் என்று யோசனை கூறியுள்ளார் முன்னாள் வெளிவிவகார பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா.