மேலும்

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுனர், தலைமைச் செயலர் பதவியேற்பு

pathinathanவடக்கு மாகாண சபையின் புதிய தலைமைச் செயலராக சிறிலங்கா நிர்வாக சேவையின் முதற்தர அதிகாரியான ஏ.பத்திநாதன் இன்று காலை  பதவியேற்றுக் கொண்டார்.

மொனராகல மாவட்ட அரசாங்க அதிபராகப் பணியாற்றிய இவர், புதிய அரசாங்கம் பதவியேற்றதையடுத்து, வடக்கு மாகாண தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலியில் அமைந்துள்ள வடக்கு மாகாண தலைமைச் செயலரின் பணியகத்தில் இன்று காலை இவர் கடமையைப் பொறுப்பேற்ற நிகழ்வில், வடமாகாண அமைச்சுக்களின் செயலர்கள் அதிகாரிகள் மற்றும் மொனராகல மாவட்டச் செயலக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

pathinathan

அதேவேளை, வடக்கு மாகாண ஆளுனர் பாலிஹக்காரவும் இன்று காலை தனது கடமையைப் பொறுப்பேற்றுள்ளார்.

இன்று காலை 9.20 மணியளவில் நடந்த உளிமையான நிகழ்வில் அவர் பணிகளை பொறுப்பேற்றார்.

இந்த நிகழ்வில், வடக்கு மாகாண முதலமைச்சர், அமைச்சர்கள், அரச , இராணுவ அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

எனினும், இந்த நிகழ்வில் ஊடகங்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *