மேலும்

நாள்: 17th November 2014

25 விதமான 10 ரூபா நாணயக்குற்றிகளை வெளியிட்டது சிறிலங்கா

சிறிலங்காவின் 25 நிர்வாக மாவட்டங்களையும் சித்திரிக்கும் வகையில், 25 விதமான புதிய 10 ரூபா நாணயக்குற்றிகள் இன்று சிறிலங்கா மத்திய வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

போர்க்குற்ற சாட்சியங்களை கோருகிறது சிறிலங்கா அதிபர் ஆணைக்குழு

போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த எழுத்து மூலமான சாட்சியங்களைச் சமர்ப்பிக்குமாறு, சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

ஐ.நா விசாரணை நிபுணத்துவமான முறையில் நடக்கவில்லை – சிறிலங்கா மீண்டும் குற்றச்சாட்டு.

போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்தும் விசாரணைகள், நிபுணத்துவம் வாய்ந்ததாக இடம்பெறவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மகிந்தவின் குற்றச்சாட்டை எரிக் சொல்ஹெய்ம் நிராகரிப்பு – கசிந்தது அறிக்கையின் பிரதி (3ம் இணைப்பு)

விடுதலைப் புலிகளுக்கு நோர்வேயும் தானும், நிதியுதவி அளித்ததாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சுமத்தியிருந்த குற்றச்சாட்டை நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் நிராகரித்துள்ளார்.

நான்காவது கட்ட ஈழப்போரில் கடற்படையின் அனுபவங்கள் – நூலை வெளியிட்டார் முன்னாள் தளபதி

சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட எழுதிய அதிஸ்டானய (விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததில், கடற்படையின் பங்கு) என்ற நூல் இன்று காலை கொழும்பில்  வெளியிடப்பட்டுள்ளது.

கொமன்வெல்த் மாநாட்டின் மூலம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் சிறிலங்காவின் முயற்சி படுதோல்வி

கொமன்வெல்த் மாநாட்டின் மூலம் பெருமளவு வெளிநாட்டு முதலீடுகளைக் கவரலாம் என்று திட்டமிட்டிருந்த சிறிலங்காவுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

கடுமையான இராணுவ கண்காணிப்பின் கீழ் முன்னாள் போராளியின் இறுதிச்சடங்கு

மன்னார் வெள்ளாங்குளத்தில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் போராளியின் இறுதிச் சடங்கு நேற்று சிறிலங்காப் படையினரின் கடுமையான கண்காணிப்புக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது.

வடக்கு மாகாணசபைக்குள் முரண்பாட்டை ஏற்படுத்தும் இந்தியாவின் வாகனங்கள்

வடக்கு மாகாணசபை உறுப்பினர்களின் பாவனைக்கு எட்டு வாகனங்களை வழங்க இந்தியா முன்வந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசாங்கத்தில் நீடிக்குமா ஜாதிக ஹெல உறுமய? – முடிவு இன்று அறிவிப்பு

சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணியில் தொடர்வதா – வெளியேறுவதா என்பதை முடிவு செய்வதற்காக ஜாதிக ஹெல உறுமயவின் மத்திய குழு இன்று கூடவுள்ளது.

எதிர்க்கட்சிகளின் கூட்டு முன்னணி உடன்பாடு கைச்சாத்திடும் நிகழ்வு ஒத்திவைப்பு

சிறிலங்காவில் வரும் ஜனவரி மாதம் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் அதிபர் தேர்தலில், பொதுவேட்பாளரை நிறுத்துவதற்கான எதிர்க்கட்சிகளின் கூட்டு முன்னணியை உருவாக்கும் உடன்பாடு கைச்சாத்திடும் நிகழ்வு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.