புலிகளுக்கு நோர்வே அளித்த உதவிகள் குறித்து விசாரிக்க வேண்டும் – மகிந்த ராஜபக்ச
நோர்வேயின் முன்னைய அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு அளித்த நிதியுதவிகள் குறித்து, விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
நோர்வேயின் முன்னைய அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு அளித்த நிதியுதவிகள் குறித்து, விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
இருபது ஆண்டுகளுக்கு முன்னர் விடுலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவரை, புனர்வாழ்வு அளிக்க வேண்டும் என்று கூறி சிறிலங்கா காவல்துறையின் தீவிரவாத தடுப்பு பிரிவினர் பிடித்துச் சென்றுள்ளனர்.
சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்தும் விசாரணைக்கான சாட்சியங்கள் சேகரிப்பு முடிவுக்கு வந்துள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளது.
சிறிலங்காவுக்கு சீனா வழங்கியுள்ள நிதி உதவிகளில், 98 வீதமும் கடன்கள் தான் என்றும், வெறும் 2 வீதம் மட்டுமை நன்கொடைகள் என்றும் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்.
சீனாவுடனும், இந்தியாவுடனும், சுமுகமான உறவை சிறிலங்கா அரசாங்கம் கொண்டிருப்பதாகவும், இந்த விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முனைவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்.
1980களின் பிற்பகுதியில், ஜே.வி.பி தடைசெய்யப்பட்ட போது விஜயவீர புதியதொரு மூர்க்கமான கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கினார். தமிழ்ப் புலிகளுடன் சமரசப் பேச்சுக்களை மேற்கொள்வதற்கு முயற்சிப்பதானது சிங்களவர்களை விற்பதற்குச் சமமாகும் என ஜே.வி.பி வாதிட்டது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பொதுமன்னிப்பு அளித்து விட்டதாக, நேற்று இந்திய ஊடகங்களில் வெளியான தகவல்களை சிறிலங்கா அதிபர் செயலகம் நிராகரித்துள்ளது.
மன்னார், வெள்ளாங்குளத்தில் முன்னாள் போராளியான கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தனிப்பட்ட குரோதத்தினால் நிகழ்ந்த கொலை என்று சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
கனடாவில் கடந்த செவ்வாய்க்கிழமைஇரவு இடம்பெற்ற விமான விபத்து ஒன்றில் இரண்டு தமிழர்கள் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.