மேலும்

Archives

அமெரிக்காவின் மேரிலன்ட் மாநில ஆளுனர் பதவிக்கு இலங்கைத் தமிழ்ப் பெண் கிரிசாந்தி போட்டி?

அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணியான மிச்சேல் ஒபாமாவின், கொள்கைப் பணிப்பாளர்களில் ஒருவராக இருந்த இலங்கைத் தமிழ்ப் பெண்ணான,கிரிசாந்தி விக்னராஜா, மேரிலன்ட் மாநில ஆளுனர் பதவிக்குப் போட்டியிடவுள்ளார் என்று கூறப்படுகிறது.

அனுராதபுர மருத்துவமனையில் கால் மாற்று அறுவைச் சிகிச்சை – தமிழ் மருத்துவரின் சாதனை

சிறிலங்காவின் வரலாற்றில், முதல் முறையாக, கால் மாற்று அறுவைச் சிகிச்சை ஒன்றைச் செய்து தமிழ் மருத்துவர் ஒருவர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சாதனை படைத்துள்ளனர்.

நீதிபதியின் இளஞ்செழியனின் பாதுகாப்பு அதிகாரியின் உடலுக்கு வடக்கு முதல்வர் அஞ்சலி

நல்லூரில் கடந்த சனிக்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த- சிறிலங்கா காவல்துறை அதிகாரியான சரத் பிறேமச்சந்திரவின் உடலுக்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று அஞ்சலி செலுத்தினார்.

சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகளுடன் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க சந்திப்பு

முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  அதிகாரிகளுடன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று முக்கிய சந்திப்பு ஒன்றை மேற்கொண்டார்.

மட்டக்களப்பில் சிறப்பு அதிரடிப்படையினர் சூடு – தப்பியோடிய இளைஞன் பலியானதால் பதற்றம்

சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டை அடுத்து, ஆற்றில் குதித்த இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி மரணமானதை அடுத்து, மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் பொதுமக்களுக்கும் சிறிலங்கா காவல்துறையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசுக்கு கடுப்பை ஏற்படுத்திய ஐ.நா சிறப்பு நிபுணரின் பூர்வாங்க அறிக்கை

மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களைப் பாதுகாத்தலும் மேம்படுத்தலும் தீவிரவாத எதிர்ப்புத் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் ஜூலை 10 தொடக்கம் 14 வரையான காலப்பகுதியில் சிறிலங்காவிற்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் இவரா?

நல்லூரில் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என்று நம்பப்படும் ஒருவர் தப்பிச் செல்லும் காட்சி என்று கூறப்படும் ஒளிப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இந்தியாவில் கட்டப்பட்ட ‘சயுரால’ போர்க்கப்பல் நாளை கொழும்பு நோக்கிப் புறப்படுகிறது

இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் சிறிலங்கா கடற்படைக்காக கட்டப்பட்ட ‘சயுரால’ என்று பெயரிடப்பட்டுள்ள ஆழ்கடல் ரோந்துக் கப்பல் நாளை கொழும்பு நோக்கிப் புறப்படவுள்ளது.

சைப்ரசில் இலங்கையர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை

சைப்ரஸ் நாட்டின் லிமாசோல் நகரில் 42 வயதுடைய இலங்கையர் ஒருவர் இன்று அதிகாலையில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் ஆறாவது மாடியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிலேயே இந்தக் கொலை நடந்துள்ளது.

ஜெனரல் கொப்பேகடுவவின் மரணம் – மீள் விசாரணை கோருகிறார் மல்வத்த பீடத்தின் அனுநாயக்கர்

அராலித்துறையில் லெப்.ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ உள்ளிட்ட உயர்மட்ட படை அதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மீள் விசாரணை நடத்தப்பட்டு, அதன் கண்டறிவுகள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்று மல்வத்த பீடத்தின் அனுநாயக்க தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.