மேலும்

Archives

சிறிலங்கா இராணுவத்தை ஆய்வு செய்ய வந்தது ஐ.நா நிபுணர் குழு

ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றுவதற்காக மாலிக்கு அனுப்புவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள சிறிலங்கா படையினர் மற்றும் அவர்களின் ஆயுதங்கள் மற்றும் கருவிகளை மதிப்பீடு செய்வதற்கும், ஆய்வு செய்வதற்கும், ஐ.நா குழுவொன்று சிறிலங்கா வந்துள்ளது.

கொழும்புக்கு வந்துள்ள இந்திய பாதுகாப்பு அதிகாரிகள்

இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட சயுரால போர்க்கப்பலை அதிகாரபூர்வமாக இயக்கி வைக்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக இந்தியாவின் முக்கிய பாதுகாப்பு அதிகாரிகள் பலரும் கொழும்பு வந்திருந்தனர்.

மலபார் கூட்டுப் பயிற்சி – யாரைக் குறிவைக்கிறது?

யப்பானியப் போர்க் கப்பல்களான ஜே..எஸ் இசுமோ (JS Izumo)  மற்றும் ஜே.எஸ் சசனமி (JS Sazanami)  ஆகியன இந்தியா மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து மலபார் 2017 கடல் சார் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டமையானது யப்பானின் கடல் சார் ஆதிக்கம் தொடர்பான புதிய நிலைப்பாடு என்ன என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அமெரிக்க துணைத் தூதுவர் சந்திப்பு

வடக்கிற்கான பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்காவுக்கான அமெரிக்க துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் ஆலோசகர் சிறிலங்கா வருகை – இராணுவத் தளபதியை சந்திப்பு

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின்  மூத்த ஆலோசகர் ஒருவர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் மூத்த மனித உரிமைகள் ஆலோசகரான ஜூவான் பெர்னான்டஸ் என்ற அதிகாரியே சிறிலங்கா வந்துள்ளார்.

‘சயுரால’ போர்க்கப்பலை இன்று கடற்படையில் இணைத்து வைக்கிறார் சிறிலங்கா அதிபர்

இந்தியாவிடம் இருந்து சிறிலங்கா கடற்படைக்காக வாங்கப்பட்ட ‘சயுரால’ என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று கடற்படையில் அதிகாரபூர்வமாக இணைத்து வைக்கவுள்ளார்.

வடக்கு முதல்வருடன் அமெரிக்க துணைத் தூதுவர் சந்திப்பு – மயிலிட்டியையும் பார்வையிட்டார்

சிறிலங்காவுக்கான அமெரிக்க துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் நேற்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரை அடுத்தடுத்து சந்தித்த ரஷ்ய, அமெரிக்க தூதுவர்கள்

அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் சிறிலங்கா தூதுவர்கள் நேற்று ஒரே நாளில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை திடீரெனச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

கண்டி நகரிலுள்ள சிறிலங்கா இராணுவ முகாமை அகற்றுவதற்கு அஸ்கிரிய பீடம் எதிர்ப்பு

கண்டி நகரத்தில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் சிங்க ரெஜிமென்ட்டின் முகாமை அகற்றுவதற்கு அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கரும், பௌத்த பிக்குகளும் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

யாழ். படைகளின் தலைமையகத்துக்கு சிறிலங்கா இராணுவத் தளபதி இறுக்கமான உத்தரவு

யாழ்ப்பாணக் குடாநாட்டின் பாதுகாப்பு நிலவரங்களை ஆராய்ந்த சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, எந்தவொரு சூழ்நிலையிலும் இராணுவத் தலைமையகத்தின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளாமல், சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் தலையீடு செய்யக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.