மேலும்

Archives

வெள்ளிக்கிழமை தொழுகைக்குச் செல்ல அஞ்சும் முஸ்லிம்கள்

கண்டியில் வன்முறைகளை ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்புத் தரப்பினர் உரிய நடவடிக்கைகளை எடுக்காத நிலையில், இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்காக பள்ளிவாசல்களுக்குச் செல்வதற்கு தாம் அச்சத்துடன் இருப்பதாக, முஸ்லிம்கள் தெரிவித்துள்ளனர்.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நேற்றும் பள்ளிவாசல் மீது தாக்குதல்

இன வன்முறைகளால் பாதிக்கப்பட்ட கண்டி மாவட்டத்தில் நேற்று ஒரு சிறிய தாக்குதல் சம்பவம் மாத்திரமே இடம்பெற்றதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

கண்டியில் முப்படையினரும் குவிப்பு – இணைப்பதிகாரியாக மேஜர் ஜெனரல் ருக்மன் டயஸ் நியமனம்

கண்டி மாவட்டத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்த முப்படையினரும் பணியில் அமர்த்தப்பட்டுள்ள அதேவேளை, சிறிலங்கா படையினருக்கும் காவல்துறையினருக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை மேற்கொள்வதற்கான அதிகாரியாக மேஜர் ஜெனரல் ருக்மன் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டம், ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார பதவியேற்பு

சிறிலங்காவின் சட்டம், ஒழுங்கு அமைச்சராக, ஐதேகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

கண்டியில் நேற்றைய வன்முறைகளில் பலர் பலி? – கைக்குண்டும் வெடித்தது

கண்டி மாவட்டத்தில் பள்ளிவாசல் மீது நேற்று குண்டுத் தாக்குதல் நடத்த முயன்ற இரண்டு பேர் அந்தக் குண்டு வெடித்து பலியாகினர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

கண்டியில் ஊரடங்கு நேரத்தில் நேற்றிரவும் வன்முறைகள் – தடுக்க முடியாமல் திணறும் படைகள்

கண்டி மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், நேற்றிரவும் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிக்கப்பட்ட வாணிப நிலையத்தில் பறக்கவிடப்பட்ட சிங்கக் கொடி

கண்டி- கட்டுகஸ்தோட்டையில் சிங்களக் காடையர்களால் தீக்கிரையாக்கப்பட்ட முஸ்லிம்களின் வாணிப நிலையங்களில், பௌத்த கொடிகள் கட்டப்பட்டுள்ளன.

கண்டியில் மீண்டும் வெடித்தது வன்முறை – பற்றியெரியும் வாணிப நிலையங்கள் (படங்கள்)

கண்டி மாவட்டத்தில் அக்குறண, கட்டுகஸ்தோட்டை, உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று பிற்பகல் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதால், பதற்றநிலை மோசமடைந்துள்ளது.

முகமாலையில் இளவரசர் மிரெட் அல் ஹுசேன்

கண்ணிவெடிகளைத் தடைசெய்யும் அனைத்துலக பிரகடனத்தின் சிறப்பு தூதுவரான இளவரசர் மிரெட் ராட் அல் ஹுசேன் முகமாலைக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

கண்டியில் ஊடரங்கு வேளையிலும் தாக்குதல்கள் – அதிகாலையில் பற்றியெரிந்த சொத்துக்கள்

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை அடுத்து. கண்டி மாவட்டத்தில் நேற்றிரவு ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த போதிலும், ஆங்காங்கே தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.