மேலும்

Tag Archives: மனித உரிமைகள்

சுவீடன் செல்கிறார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் – ‘ஜெனிவா’வே இலக்கு?

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாளை சுவீடனுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்கொட் வோல்ஸ்ரோமின் அழைப்பின் பேரிலேயே அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை கிடைத்தது எப்படி?- ரணில்

மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஜனநாயகத்தை மீள நிலையப்படுத்தியதன் மூலமே, சிறிலங்காவுக்கு மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை கிடைத்துள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சீருடையில் இருந்த மாணவனைத் தாக்க முயன்றார் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன

பாடசாலைச் சீருடையில் இருந்த மாணவன் ஒருவனை, தாக்க முயற்சித்தார் என்று  சிறிலங்கா இராணுவத்தில் இருந்து அண்மையில் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

நிலைமாறுகால நீதி, நல்லிணக்கத் திட்டங்களுக்கு 1.7 மில்லியன் டொலரை வழங்குகிறது அமெரிக்கா

சிறிலங்காவில் நிலைமாறுகால நீதி மற்றும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களுக்கு 1.7 மில்லியன் டொலரை வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது.

போர்க்குற்ற விசாரணைக்கு அனைத்துலக அழுத்தம் இல்லை – சிறிலங்கா

போருடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்கு, அனைத்துலக சமூகம் எந்த அழுத்தங்களையும் கொடுக்கவில்லை என்று சிறிலங்கா அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டியது எனது கடமை – சிறிலங்கா அதிபர்

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டியது தனது பொறுப்பு மாத்திரமல்ல, கடமையும் கூட என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ‘த ஹிந்து’  ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

போர் வரலாற்று நூல்களை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்- மகிந்த அறிவுரை

சிறிலங்காவில் நடந்த போர் வரலாற்றைக் கூறும் நூல்கள், பாடசாலை பாடநூல்களில் இடம்பெற வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபரின் கருத்து – பிரித்தானிய அதிகாரிகளிடம் கூட்டமைப்பு அதிருப்தி

உள்ளக விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்த கருத்து தொடர்பாக, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

சிறிலங்காவின் நீதிப்பொறிமுறையில் அனைத்துலக பங்களிப்பு முக்கியம் – ஐ.நா பொதுச்செயலர்

சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்துக்கு அமைய , நம்பகமான நீதிச் செயல்முறை மற்றும் நீதிப் பொறிமுறையில் அனைத்துலக  பங்களிப்பு என்பன முக்கியம் என்று ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.

இரு முக்கிய அனைத்துலக உயர்மட்டப் பிரமுகர்களை எதிர்கொள்ளத் தயாராகிறது சிறிலங்கா

அடுத்தமாதம் முதல் வாரத்தில் இரண்டு அனைத்துலக முக்கிய பிரமுகர்களை எதிர்கொள்வதற்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தயாராகி வருகிறது.