மேலும்

Tag Archives: அரசியலமைப்பு

அனைத்து தரப்புகளினதும் கருத்துகளை உள்வாங்கி தீர்வுத் திட்டத்தை தயாரிக்க கூட்டமைப்பு முடிவு

அனைத்து தமிழ்த் தரப்புக்களினதும் கருத்துக்களை உள்வாங்கியே, அரசியல் தீர்வுத் திட்டத்தைத் தயாரிப்பது என்று  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஜெனிவா உறுதிமொழிகளை சிறிலங்கா நிறைவேற்ற வேண்டும் – ஹியூகோ ஸ்வைர்

ஜூன் மாதம் நடக்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சிறிலங்கா குறித்து சிறப்புக் கவனம் செலுத்தப்படும் என்றும், பொறுப்புக்கூறல் தொடர்பான உறுதிமொழிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்றும், பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வைர் தெரிவித்தார்.

பிரித்தானிய வெளிவிவகார இணை அமைச்சருடன் சுமந்திரன் சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வைருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் இன்று கொழும்பில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

புதிய அரசியலமைப்பு எந்த சமூகத்துக்கும் முன்னுரிமை வழங்குவதாக அமையக்கூடாது – சுமந்திரன்

புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பு எந்தவொரு சமூகத்துக்கும் சிறப்பு முன்னுரிமை வழங்குவதாக அமையக் கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்  வலியுறுத்தியுள்ளார்.

ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப் பகிர்வு – கூட்டமைப்புடன் பேசப்போகிறதாம் சிறிலங்கா அரசு

புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சியின் கீழேயே அதிகாரங்களைப் பகிர சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகவும், இதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தவுள்ளதாகவும் சிறிலங்காவின் அரச நிறுவன மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

வடக்கு,கிழக்கை இணைக்கவோ, 13க்கு அப்பால் செல்லவோ அனுமதியோம் – சிறிலங்கா சுதந்திரக் கட்சி

அரசியலமைப்பு மாற்றத்தின்போது, 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் அதிகாரங்களைப் பகிரவோ, வடக்கு கிழக்கை இணைக்கவோ சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒரு போதும் அனுமதிக்காது என்று, அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

ஒற்றையாட்சி அரசியலமைப்பே உருவாக்கப்படும் – சிறிலங்கா அமைச்சர் கூறுகிறார்

புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பு ஒற்றையாட்சிக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கும் என்று சிறிலங்காவின் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும், நாடாளுமன்ற அவைத் தலைவருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை – செவ்வாயன்று வாக்கெடுப்பு

நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் தீர்மானத்தை நிறைவேற்றும் நடவடிக்கை வரும் 12ஆம் நாள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சபையாக மாறுகிறது நாடாளுமன்றம் – இன்று காலை சிறப்பு அமர்வு

சிறிலங்கா நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை இன்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை – சிறிலங்கா அரசு

அரசியலமைப்புத் திருத்தம், ஒன்றுபட்ட சிறிலங்காவுக்குள் அதிகாரப் பகிர்வை மேற்கொள்ளும் வகையிலேயே மேற்கொள்ளப்படும் என்றும், சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார், சிறிலங்காவின் பிரதி அமைச்சர் அஜித் பெரேரா.