மேலும்

Tag Archives: அரசியலமைப்பு

நல்லிணக்கச் செயற்திட்டங்களுக்கு வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு தடை

ஐ.நாவுடன் தொடர்புடைய அமைப்புகளின் உதவியுடன் சந்திரிகா குமாரதுங்க மற்றும் மனோ கணேசன் உள்ளிட்டோரால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க விழிப்புணர்வுத் திட்டங்களைக் குழப்பும் உத்தரவு ஒன்று சிறிலங்கா பிரதமரால் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பொறுப்புக்கூறலை விட எதிர்காலத்தின் மீதே தமிழ் மக்களுக்கு அதிக கரிசனை – என்கிறார் சந்திரிகா

போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்பதை விட, தமது எதிர்காலம் தொடர்பாகவே தமிழ் மக்கள் அதிக கரிசனை கொண்டுள்ளனர் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு அரசியலமைப்பு மாற்றம் குறித்து ஆலோசனை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு நேற்று கொழும்பில் கூடி அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்துக் கலந்துரையாடியது.

அரசியலமைப்பு திருத்தம் குறித்த விவாதம் ஒத்திவைப்பு

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பு யோசனை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள உப குழுக்களின் அறிக்கைகள் தொடர்பாக அடுத்தவாரம் நடத்தப்படவிருந்த விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு திருத்த யோசனைகள் குறித்து நாடாளுமன்றில் மூன்று நாட்கள் விவாதம்

புதிய அரசியலமைப்பு தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வரும் ஜனவரி மாதம் மூன்று நாட்கள் விவாதம் நடத்தப்படவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சம்பந்தனுடன் தென்னாபிரிக்க தூதுவர் சந்திப்பு – ஒரு மணிநேரம் ஆலோசனை

சிறிலங்காவுக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் ரொபினா மார்க்ஸ், எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பாக மார்ச் மாதம் பொதுவாக்கெடுப்பு?

புதிய அரசியலமைப்புத் தொடர்பான மக்கள் கருத்தறியும் பொதுவாக்கெடுப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்படவுள்ளதாக, சிறிலங்கா அரசாங்க உட்தரப்புத் தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா அதிபருடன் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீண்ட சந்திப்பு

தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு புதிய அரசியலமைப்பையே அறிமுகப்படுத்துமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று அரசியலமைப்பு பேரவை கூடுகிறது – இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்கிறார் ரணில்

புதிய அரசியலமைப்பு குறித்த இடைக்கால அறிக்கை, அரசியலமைப்பு பேரவையாக அறிவிக்கப்பட்டுள்ள சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஸ்கொட்லாந்தின் அதிகாரப் பகிர்வு குறித்து ஆராய சித்தார்த்தனும் இன்று லண்டன் பயணம்

ஸ்கொட்லாந்தின் சமஷ்டி அதிகாரப் பகிர்வு குறித்து ஆராய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இரா.சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் பிரித்தானியா சென்றுள்ள நிலையில், மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தனும் இன்று லண்டன் செல்லவுள்ளார்.