மேலும்

இன்று அரசியலமைப்பு பேரவை கூடுகிறது – இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்கிறார் ரணில்

ranil-parliamentபுதிய அரசியலமைப்பு குறித்த இடைக்கால அறிக்கை, அரசியலமைப்பு பேரவையாக அறிவிக்கப்பட்டுள்ள சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக, முழு நாடாளுமன்றமும், அரசியலமைப்பு பேரவையாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அரசியலமைப்புப் பேரவையின் கூட்டம் இன்று காலை 9 மணியளவில் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார்.

இந்த அமர்வில், அரசியலமைப்புத் திருத்தம் குறித்த உப குழுக்களின் அறிக்கையை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சமர்ப்பிப்பார்.

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான நியமிக்கப்பட்ட ஆறு உப குழுக்கள், வழிகாட்டுதல் குழுவுக்குச் சமர்ப்பித்திருந்த அறிக்கைகளையே சிறிலங்கா பிரதமர் அரசியலமைப்புப் பேரவையில் இன்று சமர்ப்பிக்கவுள்ளார்.

மேலும்,  தேர்தல்முறை மறுசீரமைப்பு, அதிகாரப்பகிர்வு, நிறைவேற்று அதிகாரம் ஆகிய முக்கிய விடயப் பரப்புகளை ஆராயும் உப குழுக்கள் இன்னமும் தமது பணிகளை முடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *