மேலும்

‘மொட்டு’ மாநாட்டில் மைத்திரி அணியின் 10 எம்.பிக்கள்

கொழும்பு சுகததாச உள்ளரங்கில் இன்று நடைபெறும் பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று பிற்பகல் அதிபர் வேட்பாளரை அறிவிக்கிறார் மகிந்த

சிறிலங்காவின் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியில் நிறுத்தவுள்ள தமது வேட்பாளரை எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச இன்று அறிவிக்கவுள்ளார்.

எக்னெலிகொட படுகொலை- 9 இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவைக் கடத்திச் சென்று, படுகொலை செய்த சூழ்ச்சி தொடர்பாக, ஒன்பது இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால், குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவுள்ளன.

ரணிலின் முடிவுக்கு எதிராக 50 எம்.பிக்கள்?

ஐதேகவின் அதிபர் வேட்பாளரை தீர்மானிப்பதற்கு கட்சியின் நாடாளுமன்றக் குழுவையும், செயற்குழுவையும் கூட்டுமாறு, கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரும் கடிதம் ஒன்றில் 50இற்கும் மேற்பட்ட ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குத்துக்கரணம் அடித்தார் கோத்தா

தமிழர்களின் ஆதரவு தமக்குத் தேவையில்லை என்று தான் கூறியதாக வெளியான செய்திகள் தவறானவை என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வேட்பாளரை அறிவித்த பின்னரே கூட்டணி – சஜித் அழுங்குப்பிடி

அதிபர் வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்பட்ட பின்னரே, புதிய கூட்டணியை அமைக்க வேண்டும் என ஐதேகவின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

வலி.வடக்கில் வாழ்ந்த புலம்பெயர் தமிழர்களுக்கு அவசர அழைப்பு

காங்கேசன்துறை தேர்தல் தொகுதியின் வாக்காளர் பதிவேட்டில் இருந்து 25 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் யாழ். மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்கள் 5 ஆக, குறைக்கப்படும் நிலை ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்பட்டதை வரவேற்கும் சிறிலங்காவின் பௌத்த பீடங்கள்

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தைப் பிரித்து, லடாக் யூனியன் பிரதேசத்தை இந்திய அரசாங்கம் உருவாக்கியிருப்பதற்கு சிறிலங்காவின் முக்கியமான பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.

ரணில்- சஜித் இடையே இணக்கம்- விரைவில் கூட்டணி உடன்பாடு

வரும் அதிபர் தேர்தலை எதிர்கொள்வதற்கேற்ற வகையில், கூடிய விரைவில் கூட்டணியை அமைத்துக் கொள்வதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க குடியுரிமையை கைவிட்டதாக கோத்தா அறிவிக்கவில்லை

அமெரிக்க குடியுரிமையை கைவிட்டு விட்டதாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச, இதுவரை தனது அமைச்சுக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என, உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் வஜித அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.