மேலும்

பிரிவு: மொழிபெயர்ப்புகள்

ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட ‘சமுத்ரா தேவி’ – பத்தாண்டுகளின் பின்னால் அதன் நினைவுகூரும் சிறப்பு பயணம்

சமுத்திரா தேவியின் இயந்திரம் மற்றும் சேதமடைந்த இதன் பெட்டிகள் போன்றன 2008ல் மீளவும் பொருத்தப்பட்டன. பத்தாண்டுக்கு முன்னர் சமுத்திரா தேவி பயணித்த அதே நேரம் வெள்ளியன்று ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்டவர்களின் உறவினர்களை ஏற்றிக் கொண்ட தெற்கிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்தது.

சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் எவர் வெற்றி பெற்றாலும் அவர்களுடன் பேச்சுக்கள் நடாத்த ஆவலாக உள்ளோம் – நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன்

“இறுதிக்கட்ட யுத்தமானது தமிழ் மக்களுக்கான சுதந்திர தமிழீழத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான அழுத்தத்தை வழங்கியது. சிறிலங்கா இராணுவத்தால் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள் மற்றும் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் போன்றன தமிழ் மக்களுக்கு சுதந்திர தமிழீழம் வழங்கப்பட வேண்டும் என்பதற்கு மேலும் பலம் சேர்த்துள்ளது”.

ஆழிப்பேரலையில் உயிர் தப்பியதால் உலகப்புகழ் பெற்ற அபிலாஸ் – அனைத்துலக நிறுவனங்களின் போலியான வாக்குறுதிகள்

ஆழிப்பேரலை அனர்த்தத்திலிருந்து அபிலாஸ் மயிரிழையில் உயிர்தப்பியதால் மட்டுமன்றி இவனை மீண்டும் இவனது பெற்றோர் திரும்பப் பெற்றுக் கொள்வதற்கு 52 நாட்கள் நீதிக்காகப் போராடியதாலேயே இன்றளவும் அபிலாசின் பெயர் உலகம்பூராவும் பிரபலம் பெற்றிருப்பதற்குக் காரணமாகும்.

சிறிலங்கா அதிபர் தேர்தல் தனியொரு குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டுமா?

சிறிலங்கா அதிபர் ராஜபக்ச ஜனவரி 08 தேர்தலில் வெற்றி பெற்றால், சிறிலங்காவானது மேலும் பொருளாதாரத் தேசியவாதம் மற்றும் சீனாவில் தங்கியிருக்க வேண்டிய பொருளாதாரத்துடன் இணைந்த அதிகாரத்துவம், சிங்கள-பௌத்த பேரினவாதம் மற்றும் இனவாதம் போன்றவற்றைக் கொண்ட ஒரு நாடாக மாறும்.

‘சீனா தனது ஆதிக்கத்தை வலுப்படுத்துவதற்காக புராணக் கதைகள் மற்றும் வரலாற்றுச் சம்பவங்களைப் பயன்படுத்துகிறது’

கிறிஸ்தோபர் கொலம்பஸ் மாலுமியாக இருந்த சான்ரா மரியா கப்பலை விட 200 இற்கும் மேற்பட்ட மிகப் பெரிய கப்பல்களை சீனாவை ஆண்ட செங்க் ஹீ என்கின்ற ஆட்சியாளர் வைத்திருந்தார். பல சிறிய படகுகள் இணைக்கப்பட்ட இவ்வாறான 50 கப்பல்கள் 27,000 வரையான வீரர்களை ஏற்றிக்கொண்டு தென்கிழக்கு ஆசியாவான இந்திய உபகண்டம், மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆபிரிக்க நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டன. இது

‘சிறிலங்காவில் சீனாவின் இருப்பு தனக்கு பாதுகாப்பற்றதென இந்தியா கருத வேண்டியதில்லை’ – முன்னாள் இராஜதந்திரி ஜெயந்த தனபால

சீனாவுக்கு சிறிலங்கா சிறப்புச் சலுகைகளை வழங்குவது தொடர்பாகவும் சிறிலங்காவில் சீனாவால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் தொடர்பாகவும் இந்தியா திறந்த மனதோடு கருத்துக்களை வெளியிட வேண்டும் என முன்னாள் இராஜதந்திரி ஜெயந்த தனபால தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா : ‘அதிபர் ராஜபக்சவும் அவரது அதிகாரம் மிக்க சகோதரர்களும் பதவியை விட்டு வெளியேறுவதில் எதிர்ப்பைக் காண்பிப்பார்கள்’

தற்போதைய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் அவரது சக்திமிக்க சகோதரர்களும் ஆட்சி அதிகாரத்தை விட்டு வெளியேறுவதில் எதிர்ப்பைக் காண்பிக்கலாம் என்கின்ற அச்சம் அதிகரித்து வருவதாக அனைத்துலக நெருக்கடிகள் குழுவின் சிறிலங்காவுக்கான ஆய்வாளர் அலன் கீன் தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா: அபிவிருத்தி என்னும் போர்வையில் முல்லைத்தீவின் காடுகள் அழிப்பு

முல்லைத்தீவின் 1000 ஏக்கர் பரப்பைக் கொண்ட Pansal Kanda என்கின்ற காட்டுப்பகுதி துப்பரவு செய்யப்பட்டு 25 ஏக்கர் நிலப்பரப்பாகப் பிரிக்கப்பட்டு செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலம் மற்றும் சொத்துக்கள் அபகரிப்பு – குற்றவாளிகள் யார்?

சிறிலங்காப் படைகளால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களை விட சட்ட ரீதியற்றவர்களால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்கள் மற்றும் வீடுகளின் அளவு மிகவும் அதிகமாகக் காணப்படுவதாக வீட்டு உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.