மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

துறைமுக நகரத் திட்டம் குறித்த அரசின் நிலைப்பாட்டை வெளியிட ஜூன் 15 வரை காலஅவகாசம்

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பான, சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாட்டை, வெளிப்படுத்துவதற்கு காலஅவகாசம் தேவை என்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சிறிலங்காவின் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

19வது திருத்தத்தை நிறைவேற்ற மைத்திரி பெரும் போராட்டம் – இணப்பாட்டை ஏற்படுத்த முயற்சி

19வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான ஆளும்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இழுபறிகளைத் தீருக்கும் கடைசி நேர முயற்சியில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறுவேன் – அல்- ஜசீராவுக்கு மகிந்த செவ்வி

நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டால் தான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.அல்-ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய சிங்கக்கொடி தமக்கு எதிரான சூழ்ச்சியாம் – குற்றம்சாட்டுகிறார் மகிந்த

ராஜபக்சக்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில், சர்ச்சைக்குரிய சிங்கக் கொடிகளைப் பயன்படுத்தியது, ஒரு சூழ்ச்சியாக இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

வடக்கு, கிழக்கில் உடல் உறுப்புகளை இழந்த 3,402 முன்னாள் போராளிகள்

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளில், 3,402 பேர், போரில் உடல் உறுப்புகளை இழந்தவர்கள் என்றும், இவர்களில் 900 பேர், வாழ்நாள் முழுவதும் பராமரிக்க வேண்டியவர்கள் என்றும் சிறிலங்காவின் புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் விஜேதிலக தெரிவித்துள்ளார்.

ஐ.நாவுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவர் ரொகான் பெரேரா – பான் கீ மூன் சந்திப்பு

நியுயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான சிறிலங்காவின் புதிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள அம்ரித் ரொகான் பெரேரா, ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

அமைச்சரவை அங்கீகரித்த புதிய தேர்தல் முறை – சுமந்திரன் உள்ளிட்ட மூவர் குழு நியமனம்

புதிய தேர்தல் பொறிமுறை தொடர்பான வரைவைத் தயாரிப்பதற்குப் பொறுப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

துறைமுக நகரத் திட்டத்தில் ஊழல் இடம்பெறவில்லை – சிறிலங்கா அரசு

இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள, சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தில் எந்த ஊழலும் இடம்பெறவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அதிபர் நாளை நாட்டு மக்களுக்கு முக்கிய உரை – நாடாளுமன்றம் கலைக்கப்படுமா?

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை இரவு 9 மணியளவில் நாட்டு மக்களுக்கு இலத்திரனியல் ஊடகங்களின் மூலம்  மிக முக்கியமான உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘நாம் புலிகளின் சித்தாந்தம் மீது பற்றுறுதி கொண்டவர்களல்ல’ – நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்

விடுதலைப் புலிகள் மீதோ அவர்களின் சித்தாந்தம் மீதோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பற்றுறுதி கொண்டதல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.