துறைமுக நகரத் திட்டம் குறித்த அரசின் நிலைப்பாட்டை வெளியிட ஜூன் 15 வரை காலஅவகாசம்
கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பான, சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாட்டை, வெளிப்படுத்துவதற்கு காலஅவகாசம் தேவை என்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சிறிலங்காவின் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி, சுற்றுச்சூழலுக்கு நீதிகோரும் மையத்தினால், மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற போதே, துறைமுக நகரத் திட்டம் தொடர்பான, சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாட்டை, வெளிப்படுத்துவதற்கு காலஅவகாசம் தேவை என்று சட்டமா அதிபர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த திட்டம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பான அறிக்கையை, ஜூன் 15ம் நாள் சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு மேல் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.