மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

கைது செய்யப்பட்டார் சஜின் வாஸ் குணவர்த்தன

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

ஊழல் விசாரணைகளை நிறுத்துமாறு மகிந்த விடுத்த கோரிக்கை மைத்திரியால் நிராகரிப்பு

தனது ஆதரவாளர்களுக்கு எதிரான ஊழல் மோசடி விசாரணைகளை நிறுத்துமாறு சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச விடுத்த கோரிக்கையை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்து விட்டதாக சீன செய்தி நிறுவனமான சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.

சீன – சிறிலங்கா உறவில் தேவையற்ற இடையூறு – சீனா கருத்து

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டது இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

கொழும்பில் அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் – புதிய அரசுடன் உறவை வலுப்படுத்த முயற்சி

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துடன், ஆட்கடத்தல்களைத் தடுத்தல் தொடர்பான பேச்சுக்களை நடத்துவதற்காக, அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் பீற்றர் டட்டன் கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

பசிலை வெலிக்கடைக்குள் அடைக்க நீதிவான் உத்தரவு – மே 7 வரை விளக்கமறியல்

சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை நாளை மறுநாள்  வரை விளக்கமறியலில் வைக்க, கடுவெல நீதிமன்ற நீதிவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

பாகிஸ்தானுக்கான தூதுவராக நியமிக்கப்படுகிறார் ஜெனரல் தயா ரத்நாயக்க?

பாகிஸ்தானுக்கான தூதுவராக, சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க நியமிக்கப்படவுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பொறுப்புக்கூறல் நிலைப்பாட்டில் இருந்து விலகாது அமெரிக்கா – கூட்டமைப்பிடம் ஜோன் கெரி உறுதி

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள புதிய சூழலைத் தமிழர் தரப்பு, சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிடம் 200 மில். டொலருக்கு தொடருந்து இயந்திரங்கள்,பெட்டிகளை வாங்குகிறது சிறிலங்கா

இந்தியாவிடம் இருந்து 200 மில்லியன் டொலர் பெறுமதியான டீசலினால் இயக்கப்படும் தொடருந்து இயந்திரங்கள் மற்றும், தொடருந்துப் பெட்டிகளை வாங்கவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.சிறிலங்காவின் போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

சிறிலங்காவுக்கு எந்த வழியிலான உதவியை வழங்கவும் தயார் – ஜோன் கெரி வாக்குறுதி

இலங்கையர்கள் தமது எதிர்காலத்தை வடிவமைக்க எந்த வழியிலான உதவிகளையும் வழங்க அமெரிக்கா தயாராக உள்ளதாக, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி வாக்குறுதி அளித்துள்ளார்.

இரண்டாவது மீட்புக் குழுவை பயணிகள் விமானத்தில் அனுப்பியது சிறிலங்கா

நிலநடுக்கத்தினால் பேரழிவைச் சந்தித்துள்ள நேபாளத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கு, 97 சிறிலங்கா படையினரையும், 17 தொன் எடையுள்ள அத்தியாவசியப் பொருட்களையும் ஏற்றிய இரண்டாவது விமானம் இன்று சிறிலங்காவில் இருந்து காத்மண்டு சென்றது.