மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

தேர்தலை எதிர்கொள்ள அஞ்சும் சுதந்திரக் கட்சி தலைவர்கள் – நாடாளுமன்ற கலைப்புக்கு எதிர்ப்பு

தேர்தலின் போது, அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய வரும் ஏப்ரல் 23ம் நாள் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதையடுத்து, நாளை முக்கிய கூட்டம் ஒன்றுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு இந்தியா வலியுறுத்த முடியாது – சிறிலங்கா அமைச்சர்

13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தை இந்தியா வற்புறுத்த முடியாது என்று சிறிலங்காவின் நிதி இராஜாங்க அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

நௌருவில் உள்ள அகதிகளை கம்போடியாவில் குடியேற்றுகிறது அவுஸ்ரேலியா

நௌரு தீவில் உள்ள அவுஸ்ரேலிய தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளின் அகதிகள் கம்போடியாவில் குடியேற்றப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கில் படுமோசமான நிலையில் ஊடக சுதந்திரம் – அனைத்துலக ஊடகவியலாளர் கூட்டமைப்பு

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா காவல்துறையினரால் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டதற்கு, சுதந்திர ஊடக இயக்கமும், அனைத்துலக ஊடகவியலாளர் கூட்டமைப்பும் கண்டனம் வெளியிட்டுள்ளன.

சிறிலங்கா மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை உடனடியாக விலகும் சாத்தியம் இல்லை

சிறிலங்காவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்டுள்ள, மீன் ஏற்றுமதித் தடை உடனடியாக விலக்கிக் கொள்ளப்படும் சாத்தியங்கள் இல்லை என்றும், இந்த ஆண்டு இறுதிப் பகுதியிலேயே தடை நீக்கம் நடைமுறைக்கு வரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்குகிறார் கோத்தா

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் அரசியலில் நுழையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சருடன் சிறிலங்கா அதிபர் முக்கிய பேச்சு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் ஹவாஜா ஆசிப்புடன் முக்கியமான பேச்சுக்களை நடத்தியுள்ளதாக,  பாகிஸ்தான் அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன

பாகிஸ்தானுடனும் அணுசக்தி உடன்பாடு செய்து கொண்டது சிறிலங்கா – விபரங்கள் இரகசியம்

பாகிஸ்தானுடன் சிறிலங்கா அரசாங்கம் இன்று அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு உள்ளிட்ட ஆறு புரிந்துணர்வு உடன்பாடுகளில் கையெழுத்திட்டுள்ளது. 

சிறிலங்காவில் 10 ஆயிரம் ஆண்டுக்கு முந்திய இளம்பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

சிறிலங்காவின் தென்பகுதியில் உள்ள புலத்சிங்கள, பஹியங்கல பகுதியில் மீட்கப்பட்ட ஆதிகால மனித எலும்புக்கூடு, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய, இளம்பெண் ஒருவருடையது என்று, பிரித்தானியாவின் ஒக்ஸ்போட் பல்லைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

புலிகள் மீண்டும் போருக்குத் திட்டமிடக் கூடும் – எச்சரிக்கிறது சிறிலங்கா அரசு

விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகள் மீளவும் ஒருங்கிணைந்து,  இன்னொரு போருக்குத் திட்டமிடக் கூடும் என்று சிறிலங்காவின் புதிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.