மேலும்

சர்ச்சைக்குரிய சிங்கக்கொடி தமக்கு எதிரான சூழ்ச்சியாம் – குற்றம்சாட்டுகிறார் மகிந்த

flag (1)ராஜபக்சக்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில், சர்ச்சைக்குரிய சிங்கக் கொடிகளைப் பயன்படுத்தியது, ஒரு சூழ்ச்சியாக இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

காலியில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றிலேயே அவர் இந்த சந்தேகத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு வெளியே கடந்த திங்களன்று நடத்தப்பட்ட போராட்டத்திலும், கடந்த வியாழன்று கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு முன்பாகவும் நடத்தப்பட்ட போராட்டங்களில், சர்ச்சைக்குரிய சிங்கக் கொடிகள் பயன்படுத்தப்பட்டிருந்தன.

சிறிலங்காவின் தேசியக் கொடியில் உள்ள சிறுபான்மைத் தேசிய இனங்களின் அடையாளங்கள் நீக்கப்பட்ட, இந்தக் கொடிகளை, மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான முன்னாள் அமைச்சர்களும் ஏந்தியிருந்தனர்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே, மகிந்த ராஜபக்ச இது ராஜபக்சக்களுக்கு எதிரான சூழ்ச்சியாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *