ஐ.நாவுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவர் ரொகான் பெரேரா – பான் கீ மூன் சந்திப்பு
நியுயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான சிறிலங்காவின் புதிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள அம்ரித் ரொகான் பெரேரா, ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
நேற்று முன்தினம் ஐ.நா தலைமையகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரொகான் பெரேரா, தனது நியமனப் பத்திரங்களை ஐ.நா பொதுச்செயலரிடம் இதன் போது கையளித்தார்.
இதையடுத்து, சிறிலங்காவின் தற்போதைய நிலைமைகள் குறித்து குறுகிய நேரம் கலந்துரையாடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியுயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான சிறிலங்காவின் தூதரகத்தில் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக இருந்த பாலித கொஹன்ன, புதிய அரசாங்கத்தினால் திருப்பி அழைக்கப்பட்டதையடுத்தே, அங்கு புதிய தூதுவராக ரொகான் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.