மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

சிறிலங்காவுடன் பலமான உறவை எதிர்பார்க்கிறது பிரித்தானியா

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துடன், பலமான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கு பிரித்தானியா எதிர்பார்த்திருப்பதாக, அந்த நாட்டின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் விவகாரங்களுக்கான இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வயர் தெரிவித்துள்ளார்.

27 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்பு

சிறிலங்காவின் புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு தற்போது சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இடம்பெற்று வருகிறது. புதிய அமைச்சர்கள் 27 பேர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்பாக, பதவிப்பிரமாணம் செய்து வருகின்றனர்.

பிரதம நீதியரசர் மொகான் பீரிசுக்கு 48 மணிநேர காலக்கெடு

முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவினால், சட்டவிரோதமான முறையில் பதவியில் அமர்த்தப்பட்ட சிறிலங்காவின் பிரதம நீதியரசர் மொகான் பீரிசை பதவி விலகக் கோரி இன்று உயர் நீதிமன்றத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்பு ஆலோசகர் பதவி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் மூத்த ஆலோசகராக, முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயக கட்சியின்  தலைவருமான சரத் பொன்சேகா நியமிக்கப்படவுள்ளார்.

அதிபரின் பொறுப்புகளை முறைப்படி ஏற்றுக்கொண்டார் மைத்திரி

சிறிலங்காவின் ஆறாவது நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபரான மைத்திரிபால சிறிசேன, இன்று தனது கடமைகளை முறைப்படி ஏற்றுக் கொண்டார்.

அமெரிக்கா சொன்னபடி செய்து விட்டேன் – என்கிறார் மகிந்த

அமைதியான முறையில் தேர்தலை நடத்தும்படி, அமெரிக்க இராஜாங்கச் செயலர் தன்னிடம் கூறியதாகவும், அதன்படியே செய்து விட்டேன் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

அனைத்துலக விசாரணைக்கு எவரையும் கையளிக்கமாட்டோம் – புதிய அரசாங்கம்

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்காக எவரையும், அனைத்துலக சமூகத்திடம் கையளிக்கமாட்டோம் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மைத்திரியின் அமைச்சரவை இன்று நியமனம்

சிறிலங்காவின் புதிய அமைச்சரவையை, அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று நியமிக்கவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தானே தலைவர் என்கிறார் மகிந்த – உடைகிறது சுதந்திரக் கட்சி

சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு தனக்கே உள்ளதாகவும், தானே கட்சியின் தலைமைப் பதவியை வகிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.

மகிந்தவின் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரியிடம் சரண்

மகிந்த ராஜபக்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அமைச்சர்களாகப் பணியாற்றிய, 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்றுமாலை அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்.