மேலும்

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீது மகிந்த அரசு விதித்த தடை தொடரும் – சிறிலங்கா அரசாங்கம்

tamil-diasporaசிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தினால் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கும் எண்ணம் தமக்கு இல்லை என்று சிறிலங்காவின் புதிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையதாகவும், நாட்டில் மீண்டும் தீவிரவாதத்தை மீண்டெழச் செய்வதற்கு முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டி, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், உலகத் தமிழர் பேரவை, பிரித்தானியத் தமிழர் பேரவை, உள்ளிட்ட 15 புலம் பெயர் தமிழ் அமைப்புகளை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தடை செய்திருந்தது.

இந்தநிலையில், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவை என்று குற்றம்சாட்டி தடை செய்யப்பட்ட புலம் பெயர் அமைப்புகளின் மீதான தடை தொடரும் என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

தடையை நீக்குவது குறித்து புதிய அரசாங்கம் எந்த கலந்துரையாடலை நடத்தவோ, ஆலோசிக்கவோ இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *