சிறிலங்காவில் ஆட்சி மாறினாலும் பிரித்தானிய நிலைப்பாடு மாறாது – ஹியூகோ ஸ்வையர்
சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், சிறிலங்கா தொடர்பான பிரித்தானியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக அமைச்சர் ஹியூகோ ஸ்வையர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அவர், நேற்று கொழும்பில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
சிறிலங்காவில் புதிய அரசாங்கம் ஒன்று தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், சிறிலங்கா தொடர்பான பிரித்தானியாவின் நிலைப்பாடுகள், எந்த மாற்றமும் இன்றியே தொடரும்.
சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் போது, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், பிரித்தானியாவின் நிலைப்பாடு குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் ஹியூகோ ஸ்வையர் தெரிவித்துள்ளார்.