மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

கொமன்வெல்த் மாநாட்டினால் சிறிலங்காவுக்கு 400 மில்லியன் ரூபா இழப்பு

கொமன்வெல்த் உச்சி மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்காக புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனங்களால், சிறிலங்கா அரசாங்கத்துக்கு 400 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டதாக, கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா வெள்ள அபாயத்தை 49 ஆண்டுகளுக்கு முன்னரே கணித்த அமெரிக்க நிறுவனம்

மூன்று பிரதான ஆறுகளுக்கும் குறுக்கே, ஆறு பெரிய அணைகளை அமைக்கும் வரை, சிறிலங்கா பாரிய வெள்ள மற்றும் நிலச்சரிவு ஆபத்துக்களை எதிர்கொள்ளும் என்று அமெரிக்க பொறியியல் நிறுவனம் ஒன்று 49 ஆண்டுகளுக்கு முன்னரே எச்சரித்துள்ளது.

2020இல் சிறிலங்காவில் புகையிலை உற்பத்திக்குத் தடை

சிறிலங்காவில் புகையிலை உற்பத்தி வரும் 2020 ஆண்டில் முற்றாகத் தடை செய்யப்படும் என்று சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

ஆட்சியைக் கவிழ்க்குமாறு மகிந்தவை உசுப்பேற்றும் ஜப்பானில் உள்ள இலங்கையர்கள்

சிறிலங்காவில் ஆட்சியில் இருக்கும் தற்போதைய அரசாங்கத்தினால் ஜப்பானில் உள்ள இலங்கையர்கள் விரக்தி அடைந்துள்ளனர் என்றும், ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர் என்றும் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் அழைப்பின்றியே டோக்கியோ சென்றார் மகிந்த

ஜப்பானிய பேரரசர் அகிஹிடோவின் அழைப்பின் பேரில் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச ஜப்பானுக்குச் செல்லவில்லை என்று கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி ஜெயசேகர நியமனம்

சிறிலங்கா அமைச்சரவையின் இணைப் பேச்சாளராக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இயற்கைச் சீற்றத்துக்குப் பலியானோர் தொகை 180 ஆக அதிகரிப்பு

சிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 180 ஐ எட்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 110 பேர் காணாமல் போயிருப்பதாகவும், 109 பேர் காயமடைந்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோத்தாவுக்கு எதிரான ஊழல் மோசடி வழக்கு – ஜூலை 12இல் விசாரணை

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான ஊழல் மோசடி வழக்கு ஜூலை 12ஆம் நாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

சிறிலங்காவுக்கு உதவுவதாக அமெரிக்கா, ஜப்பான், பிரித்தானிய தூதுவர்கள் வாக்குறுதி

வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட சிறிலங்கா மக்களுக்கு உதவ அமெரிக்கா, ஜப்பான், பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் முன்வந்துள்ளன.

களுத்துறையில் உடையும் நிலையில் அணைக்கட்டு – மக்களை வெளியேறுமாறு அவசர அறிவிப்பு

களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாணப்பிட்டிய பொல்கொட அணை கடும் மழையால் உடையும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக சிறிலங்கா காவல்துறை எச்சரித்துள்ளது.