கொமன்வெல்த் மாநாட்டினால் சிறிலங்காவுக்கு 400 மில்லியன் ரூபா இழப்பு
கொமன்வெல்த் உச்சி மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்காக புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனங்களால், சிறிலங்கா அரசாங்கத்துக்கு 400 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டதாக, கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், 2013ஆம் ஆண்டு கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாடு கொழும்பில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற வெளிநாட்டுத் தலைவர்களின் பயன்பாட்டுக்காக, 82 சொகுசு வாகனங்களை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இறக்குமதி செய்திருந்தது.
இந்த வாகனங்கள் பின்னர் குறைந்த விலைக்கு விற்கப்பட்டுள்ளன. இதனால் அரசாங்கத்துக்கு 400 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டதாக கணக்காய்வாளர் திணைக்களம் கூறியுள்ளது.