மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

வெடிபொருட்கள் தொடர்பாக எதையும் மறைக்கவில்லை – என்கிறார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

சாவகச்சேரியில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டது தொடர்பாக எதையும் அரசாங்கம் மறைக்கவில்லை என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

இப்போதைக்கு இல்லை பான் கீ மூனின் சிறிலங்கா பயணம்

ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூன் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் திட்டம் ஏதும் தற்போதைக்கு இல்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சாவகச்சேரி வெடிபொருட்கள் – இனவாதிகளே கூச்சலிடுகின்றனர் என்கிறார் வடக்கு ஆளுனர்

சாவகச்சேரியில் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவத்தை, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று இனவாதிகளே கூச்சலிடுவதாகத் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே.

வெலிசறை கடற்படைத் தளத்தின் இரகசிய அறை முத்திரையிட்டு மூடப்பட்டது

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரின், கடத்தல்களுடன் தொடர்புடைய தடயங்களைக் கொண்டிருக்கும், வெலிசறை கடற்படைத் தளத்தின் இரகசிய அறை ஒன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முத்திரையிட்டு மூடப்பட்டுள்ளது.

கோத்தாவும் பசிலுமே மகிந்தவைத் தோற்கடித்தனர்- தயான் ஜெயதிலக

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, பசில் ராஜபக்சவும், கோத்தாபய ராஜபக்சவும், தம்மை முதன்மைப்படுத்தினர். இதற்கான விலையை மகிந்த ராஜபக்ச கொடுக்க வேண்டியேற்பட்டது என்று கலாநிதி தயான் ஜெயதிலக தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்புக்கு மாற்றான புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கும் முயற்சிகள் கொழும்பில் தீவிரம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான புதிய தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டணி ஒன்றை ஆரம்பிக்கும் முயற்சிகள் கொழும்பில் இடம்பெற்று வருகின்றன. இதுதொடர்பான கலந்துரையாடல் ஒன்று,நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்கப் போர்க்கப்பலில் சிறிலங்கா, அமெரிக்கத் தூதுவர்கள்

அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம் இன்று கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பலுக்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.

கொழும்பு வந்த ஜப்பானியப் போர்க்கப்பல்களுடன் சிறிலங்கா கடற்படை போர்ப்பயிற்சி

ஜப்பானியக் கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் நேற்று முன்தினம் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தன. யூடாச்சி, யூகிரி ஆகிய பெயர்களைக் கொண்ட ஜப்பானியப் போர்க்கப்பல்களே கொழும்பு வந்தன.

வினைத்திறனற்ற அமைச்சுக்களை தனது நேரடி கண்காணிப்பில் கொண்டு வருகிறார் சிறிலங்கா பிரதமர்

இந்த ஆண்டின் முதல் காலாண்டுக்குள்  திட்டமிட்ட இலக்குகளை அடையாத அமைச்சுக்கள் மற்றும் முக்கிய பொது நிறுவனங்களை தனது நேரடி கண்காணிப்புக்குள் கொண்டு வருவதற்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

உருக்கு வீடுகளை அமைக்கும் திட்டத்தை மீளாய்வு செய்ய வேண்டும் – சுமந்திரன்

வடக்கு, கிழக்கில் உருக்கினால் தயாரிக்கப்பட்ட பொருத்து வீடுகளை அமைக்கும் திட்டத்தினை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று, சிறிலங்கா அரசாங்கத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.