மேலும்

விதையாக வீழ்ந்தோரை நினைவில் கொள்வோம்

maveerar naalஈழக்கனவு சுமந்து

சுதந்திரக் காற்றின் சுவாசத்தைத் தேடி

இன்னுயிர்களை ஈந்தவர்களை

நினைவில் கொள்ளும் நாள்.

 

தேச விடியலைத் தேடிய

பாதைகள் பல;

பயணம் ஒன்று தான்.

 

காடுகள், மேடுகள்,

கடும் வதைமுகாம்கள்,

ஆர்ப்பரித்த கடல் அலைகள்,

வானையும் கிழித்து

வீழ்ந்து விதையாகினர்.

 

கல்லறையைக் கூட விட்டுவைக்கா

பேயாட்சி அரசின்

அடக்குமுறைக்கும் மத்தியில்- தமிழர்

நெஞ்சறையில் இடம்பிடித்தவர்கள்.

 

முகம் தெரிந்தும், தெரியாமலும்

மூச்சடங்கினாலும்,

வீச்சுடன் எங்கும்

விழுது பரப்பியவர்கள்.

 

விடுதலை ஒன்றே இலட்சியம்

சுதந்திர ஈழமே ஒரே மூச்சு –

வாழ்ந்ததும் அதற்கே,

களமாடி வீழ்ந்ததும் அதற்கே.

 

ஈழமண்ணின் விடுதலைக்காய்

விதையாகிப் போன

மாவீரர்கள், மக்கள்

அனைவரையும்

இந்த நாளில் நினைவு கூருகிறோம்.

– புதினப்பலகை குழுமத்தினர்

27.11.2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *