வித்தியா கொலை வழக்கு விசாரணை இன்று மீண்டும் ஆரம்பம்
புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் படுகொலை தொடர்பான விசாரணைகள், யாழ். மேல் நீதிமன்றத்தில் இன்று தொடக்கம் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் தலைமையிலான, நீதிபதிகள் பிறேம்சங்கர் மற்றும் இளஞ்செழியன் ஆகியோரைக் கொண்ட தீர்ப்பாயம் முன்பாக இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
யாழ். மேல் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆரம்பமாகும் விசாரணைகள் ஜூலை 20ஆம் நாள் விரை தொடர்ந்து இடம்பெறும்.
இந்த வழக்கின் பிரதான சாட்சியப் பதிவுகள் ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில், இன்று சாட்சிய விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளன.