22வது திருத்தம் குறித்து பொதுவாக்கெடுப்பை நடத்தவும் அரசாங்கம் தயார்
22வது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு பொது வாக்கெடுப்பு தேவை என உயர்நீதிமன்றம் தீர்மானித்தால், அதை நடத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியுமா அல்லது அதற்கும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமா என்பது குறித்த உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு அரசாங்கம் கட்டுப்படும்.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அடுத்த மாத இறுதியிலோ அல்லது ஒக்டோபரிலோ எதிர்பார்க்கப்படுகிறது.
உயர்நீதிமன்றம் என்ன முடிவு செய்தாலும் அதற்கேற்ப நாங்கள் செயற்படத் தயாராக இருப்போம்.
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்பட்டால், அதற்கேற்ப நாங்கள் செயற்படுவோம்.
பொது வாக்கெடுப்பு தேவைப்பட்டால், அதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
முன்மொழியப்பட்ட திருத்தம் பொதுமக்களின் நலனுக்காகவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தேவைப்படும் அரசியலமைப்புச் செயல்முறையைப் பொருட்படுத்தாமல் அரசாங்கம் தனது சீர்திருத்தத் திட்டங்களைத் தொடரும்.
இது மக்களுக்காக முன்வைக்கப்பட்டது. மக்களுக்காக மேற்கொள்ளப்படும் ஒரு சீர்திருத்தம் நிச்சயம் முன்னேறிச் செல்லும்,” என்றும் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
