ஆட்சியமைப்பது குறித்து சங்கு கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக, ஏனைய தமிழ்த் தேசிய கட்சிகளுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்திருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியைச் சேர்ந்த, சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகியோருடன் இதுபற்றி உரையாடியுள்ளோம்.
அவர்களிடமிருந்து சாதகமான பதில் கிடைத்தால் இணைந்து ஆட்சியமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்.
அதேவேளை, வவுனியா வடக்கு (நெடுங்கேணி) பிரதேச சபையில், சிங்கள பௌத்த இனவாத தேசிய மக்கள் சக்தி ஆட்சியைக் கைப்பற்றுவதனைத் தடுக்கும் வகையில்,ஏனைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கவும் தீர்மானித்துள்ளோம். என்றும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.